districts

img

நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு தராததால் தாராபுரம் கோட்டாட்சியர் வாகனத்தை ஜப்தி செய்ய உத்தரவு

தாராபுரம், ஏப்.25 - தாராபுரம் அருகே உள்ள நல்லதங்காள் அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிக ளுக்கு இழப்பீடு தொகை வழங்காதால், கோட்டாட்சியர் வாகனத்தை ஜப்தி செய்ய நீதி  மன்றம் உத்தரவிட்டது. தாராபுரம் அருகே உள்ள நல்லதங்காள் அணை கட்டுவதற்காக கடந்த 2000 ஆம் ஆண்டு அப்பகுதியில் உள்ள விவசாய நிலங் கள் சுமார் 750 ஏக்கர் பொதுப்பணித் துறையி னரால் கையகப்படுத்தப்பட்டது. இதில் 87  விவசாயிகளுக்கு நீதிமன்றம் மூலம் இழப்பீடு  தொகை நிர்ணயம் செய்யப்பட்டு, பொதுப்ப ணித்துறை விவசாயிகளுக்கு வழங்க வேண் டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால்  23 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இழப்பீடு  தொகை வழங்கப்படவில்லை.  இந்நிலையில், பொன்னிவாடி கிராமம் எழுகாம் வலசை சேர்ந்த  பழனிச்சாமி என்பவ ரது மகன் பெரியசாமி (38) நிலம்  36 சென்ட்  நல்லதங்காள் அணை கட்டுவதற்காக கைய கப்படுத்தப்பட்டது. இந்த நிலத்துக்கு வரு வாய்த் துறையினர் இழப்பீடு தொகையாக ரூ. 19 ஆயிரத்து 500-ஐ நிர்ணயம் செய்தனர். இந்த  நிலத்திற்கு கொடுத்த இழப்பீடு தொகை சந்தை மதிப்பை விட குறைவாக உள்ள தாக கூறி பெரியசாமி தாராபுரம் சார்பு நீதிமன் றத்தில் அதிகபட்ச தொகை வழங்க வேண்டும்  என மனு  தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு  தாராபுரம் சார்பு நீதிமன்றத்தில் விசார ணைக்கு வந்தது. கடந்தாண்டு செப்.9 ஆம்  தேதி அரசு நிர்ணயித்த தொகையை உறுதி  செய்து அதற்கு வட்டியுடன் சேர்ந்து ஒரு லட் சத்து 49 ஆயிரத்து 54 ரூபாய் வழங்க நீதி மன்றம் உத்தரவிட்டது. வருவாய்த் துறையி னர் இழப்பீடு தொகையை செலுத்தாததால் பெரியசாமி தரப்பில் தாராபுரம் சார்பு நீதி மன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய் யப்பட்டது. இழப்பீடு தொகை வழங்காதால் தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் பொருள்களான இரண்டு கம்ப்யூட்டர், 2 டேபிள், கோட்டாட்சியரின் ஜீப் ஆகியவற்றை ஜப்தி செய்ய சார்பு நீதி பதி எம்.தர்மபிரபு உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவுபடி தாராபுரம் நீதிமன்ற  ஊழியர்கள் பாதிக்கப்பட்ட விவசாயி பெரிய சாமி மற்றும் நிலம் வழங்கிய மற்ற விவசாயிக ளுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒன்று திரண்டனர். கோட்டாட்சியரிடம் அலுவ லக ஐப்தி உத்தரவை வழங்கினார்கள். இதை யடுத்து கோட்டாட்சியர் குமரேசன் மாவட்ட  ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று  ஒரு வாரத்திற்குள் இழப்பீடு தொகை வழங்க  நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித் தார். இதை ஏற்றுக்கொண்டு நீதிமன்ற ஊழி யர்கள் ஜப்தி நடவடிக்கையை ஒத்து வைத்து  சென்றனர்.