மலைப்பகுதியில் சாலை அமைக்க நடவடிக்கை: தளி பேரூராட்சி துணைத் தலைவர் தகவல்
திருப்பூர், ஜூலை 29- உடுமலைப்பேட்டை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மக்கள் குடியிருந்து வரும் செட்டில்மெண்ட் பகுதியில் இருந்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவ தாக தளி பேரூராட்சி துணைத் தலைவரும், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளருமான செல்வன் தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: உடுமலைபேட்டை மலை பகுதியில் நோய்வாய்ப்படு வோரை சிகிச்சைக்கு அழைத்து செல்ல தொட்டில் கட்டி இளைஞர்கள் தூக்கிச் செல்லும் சம்பவங்கள் தொடர்ச்சி யாக நடைபெற்று வருகின்றது. இதனால் மலைவாழ் மக்கள் நலன் கருதி தளி பேரூராட்சியில் திருமூர்த்தி மலையில் இருந்து கருஞ்சோலை நடை பாதையில் 16 ஆவது வார்டுக்கு உட்பட்ட குருமலை வரை சாலை அமைக்க தளி பேரூராட்சி யில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சாலை அமைக்கும் பொருட்டு வன உரிமை சட்ட வழிகாட்டுதலின்படி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை அமைக்கும் பட்சத்தில் மாவடாப்பு, குளிப்பட்டி, பூச்சிகொட்டாம்பாறை, மேல்குருமலை, குருமலை, காட்டுப் பட்டி ஆகிய வன மக்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் உடுமலை வந்து சேர முடியும். விரைவில் சாலை அமைப்பதற்கு தேவையான நடவடிக் கைகள் தளி பேரூராட்சியின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தளி பேரூராட்சியின் துணைத் தலைவரும், மலைவாழ் மக்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட செயலாள ருமான செல்வன் தெரிவித்துள்ளார்.
காங்கேயத்தில் போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம்
திருப்பூர், ஜூலை 29- காங்கேயம் அரசு போக்குவரத்து கிளை முன்பு வெள்ளிக் கிழமை அன்று, 14 ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக பேசி முடிக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலா ளர்களுக்கு வழங்க வேண்டிய 80 மாத டிஏ அகவிலை படி அரியர்ஸ் உடனே வழங்க வேண்டும் என்ற பல கோரிக்கை களை வலியுறுத்தி வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம் நடைபெற்றது. காங்கேயம் கிளை தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். ஓய்வு பெற்றோர் நல அமைப்பு நிர்வாகி நாச்சி முத்து, சிஐடியூ திருப்பூர் மாவட்ட குழு உறுப்பினர் கே.திரு வேங்கடசாமி, அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் திருப்பூர் மண்டல நிர்வாகிகள் நடராஜ், வின்சென்ட், காங்கேயம் கிளை துணைச் செயலாளர் ராஜசேகர், காங்கேயம் கிளை செயலா ளர் அசோக் குமார் ஆகியோர் உரையாற்றினர்.பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் நன்றி கூறினார். திருப்பூர் திருப்பூரில் காங்கேயம் கிராஸ் சாலையில் அரசு பேருந்து பணிமனை முன்பாக வெள்ளியன்று வேலை நிறுத்த விளக்க வாயில் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மண்டல பொருளாளர் என்.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மண்டல பொதுச் செயலாளர் செல்லத் துரை சிறப்புரையாற்றினார். திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
சிறுபான்மையினர் நலத்துறை வளர்ச்சித் திட்டப்பணிகள் ஆய்வு
திருப்பூர், ஜூலை 29- திருப்பூரில் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் சிறுபான்மையினர் நலத்து றையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்ப ணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வெள்ளி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இக்கூட்டம் நடைபெற்றது. சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்ததாவது, சமுதாயத் தின் அடித்தளத்தில் உள்ள சிறுபான்மையின சமூகத்தினர் சமூக, கல்வி மற்றும் பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடைவதற்கு இணக்கமானதொரு சூழலை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்த தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இக்கூட்டத்தில் அரசின் திட்டங்களை விரைந்து நடவ டிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட் டது. மேலும், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் கடனுதவி பெற்ற பயனாளி களின் வாழ்வாதார முன்னேற்றம் குறித்து திருப்பூர் தெற்கு வட்டம், தாராபுரம் ரோடு 5-ஆவது வீதி, எபிநேசர் ஜோசப் ராஜ் ரூ.1,90,000 மதிப்பீட்டில் கடனுதவி பெற்று வேஸ்ட் பனி யன் வியாபாரம் செய்து வரும் பனியன் தொழில் கூடத்தையும், சொர்ணபுரி லே-அவுட், ஜம் ஜம் நகர் முதல் வீதி, பீர் முகமது ரூ.1,90,000 மதிப்பீட்டில் கடனுதவி பெற்று வேஸ்ட் பனியன் வியாபாரம் செய்து வரும் பனியன் தொழில் வியாபாரத்தை யும், முதலிபாளையம் ஹவுசிங் யூனிட், சிக்கந்தர்பானு ரூ.1, 90,000 மதிப்பீட்டில் கடனுதவி பெற்று பூ அலங்கார தொழில் விற்பனைக் கூடத்தையும் நேரில் சென்று ஆய்வு செய்யப்பட் டது என சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் எஸ்.சுரேஷ் குமார் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய் பீம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வாசுகி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதி வாளர் சொ.சினிவாசன், மகளிர் திட்ட இயக்குநர் மதுமிதா, மாவட்ட சமூகநல அலுவலர் அம்பிகா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உணவு பொருள் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பு திரும்பப்பெற வணிக சங்கங்கள் வலியுறுத்தல்
ஈரோடு, ஜுலை 29- உணவு பொருட்கள் மீதான 5 சதவிகித ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என ஈரோடு அனைத்து தொழில் வணிக கூட்டமைப்பு வலியுறுத்தி யுள்ளது. ஈரோடு அனைத்து தொழில் வணிக சங்கங் களின் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் தலைவர் வி.கே.ராஜமாணிக்கம் தலைமை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்,ஒன்றிய அரசு உணவுப் பொருட்கள் மீது விதித்துள்ள 5 சதவிகிதஜிஎஸ்டி வரியை திரும்பப்பெற வேண்டும். மெகா ஜவுளி பூங்காக்கள் திட்டத் தில் ஈரோடு மாவட்டத்திலும்ஒன்றிய அரசு ஒரு பூங்கா அமைக்க வேண்டும். தமிழக அரசு மின் கட்டண உயர்வுஅறிவிப்பினை திரும்பப் பெற வேண்டும்.ஈரோடு காய்கறி மார்க்கெட் வணிக வளாகப் பணியை விரைந்து முடித்து வஉசி மைதானத்தில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டினை இடம் மாற்ற வேண்டும்.ஈரோடு- பெருந்துறை சாலையில் போக்குவ ரத்து நெரிசலை கட்டுப்படுத்த காலிங்கரா யன் விருந்தினர் இல்லம் முதல் திண்டல் வரை யிலான மேம்பால பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் உள்ளிட்டதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், நீதிமன்ற உத்தரவின்படி ஜவுளி விற்பனையாளர்கள் சரக்குகளை ஏற்றி, இறக்க தாங்கள் விரும்பும் தொழிலாளர் களை வைத்துக்கொள்ள காவல் துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.முன்னதாக, இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரவிச்சந் திரன், பொருளாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெண் தீக்குளிக்க முயற்சி
கோவை, ஜூலை 29- கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (40). இவ ரது வீட்டின் அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் ஊராட்சி மூலம் கழிப்பிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு கிருஷ்ணவேணி எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இந்நிலையில், கிருஷ்ண வேணி வெளியூருக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பியபோது, கழிப்பிட கட்டுமான பணிகள் தொடங்கியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை யடுத்து அவர் தீக்குளிக்க போவதாக மண்எண்ணெய் கேனுடன் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டார். இது குறித்து தகவலறிந்த வரு வாய் துறை அதிகாரிகள் விரைந்து வந்து கிருஷ்ண வேணியிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். அப்போது உரிய நடவ டிக்கை எடுப்பதாக அதிகாரி கள் கூறியதைத்தொடர்ந்து, அவர் போராட்டத்தை கைவிட்டார். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது.
உதகை: குடியிருப்பு பகுதியில் புலி நடமாட்டம் பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
உதகை, ஜூலை 29- நீலகிரி மாவட்டம், உதகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப் பகுதியில் புலி, சிறுத்தை, காட்டெருமை, யானை, கரடி உட்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில நாட்களாக வனத்தில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் அவ்வப் போது குடியிருப்புகளின் அருகே உலா வருவது வாடிக்கை யாக உள்ளது. இதன் காரணமாக சில நேரங்களில் மனித- விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. சில நேரங்களில் நகர் பகுதியில் ஒட்டி வரும் வனவிலங்குகள் கால்நடைகளை தாக்கும் சம்பவங்கள் நடக்கிறது. இந்நிலையில் உதகை - கூடலூர் சாலையில் எச்பிஎப் பகுதி யில் வளர்ப்பு எருமை ஒன்றை வனவிலங்கு வேட்டையாடி, மீத முள்ள உடலை குடியிருப்பை ஒட்டியுள்ள வனப்பகுதியில் விட்டு சென்றுள்ளது. இதன்பேரில் அங்கு சென்று வனத்துறை யினர் ஆய்வு நடத்தினர். பின்னர் கால்நடை மருத்துவர் வர வழைக்கப்பட்டு எருமையின் உடல் பிரேத பரிசோதனை செய் யப்பட்டது. இதற்கு இடையே அந்த புலி நடமாட்டம் இருப்ப தாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர். இது தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிர படுத்தியுள் ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு மானியம்
ஈரோடு, ஜுலை 29- கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.25 லட்சம் வரை மானியம் வழங் கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் போது, பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவிட தமிழ் நாடு அரசு 2022-23 ஆம் ஆண்டிற்கு இரண்டு கூறுகளுடன் கோவிட் உதவி மற்றும் தொழில் முனைவோருக்கான நிவார ணத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்காக ரூ.50 கோடியை ஒதுக்கீடு செய்து, மானியத்துடன் இணைக்கப்பட்ட கடன் திட் டம் மற்றும் ஊக்கத் திட்டம் என்ற வகையில் வழங்கப்படு கிறது. இத்திட்டம் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு நலிந்த தொழில் முனைவோரை மீண்டும் தொழில்களை நிறு விட அல்லது புதிய நிறுவனத்தைத் தொடங்கிட அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் மூலம் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கப்படும். 2020-21 ஆம் ஆண் டில் தொற்று நோயினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள், உரிமையாளர் மற்றும் கூட் டாண்மை பிரிவுகளில் உற்பத்தி மற்றும் சேவைத் துறை தொழில் நிறுவனங்களை உள்ளடக்கியவை இதன் மூலம் பயன் பெறலாம். அதிகபட்ச திட்டச் செலவு ரூ.5 கோடியாக வும், மூலதன மானியத்தின் அதிகபட்ச வரம்பு ரூ.25 லட்சமாக வும் இருக்கும். ஊக்குவிப்புத் திட்டம் என்பது கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே மானியத்திற்கு தகுதியுடையவர்கள். மூலதன மானி யமாக ஆலை மற்றும் இயந்திரங்களின் மதிப்பில் 25 சதவிகி தம், அதிகபட்சம் ரூ.25 லட்சத்திற்குட்பட்டு வழங்கப்படும். இத் திட்டம் 2022-23 ஆண்டிற்கு மட்டும் நடைமுறையில் இருக்கும். மேலும், விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சென்னிமலை ரோடு, ஈரோடு அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என ஆட்சியர் எச்.கிருஷ்ணணுண்ணி தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் இதுவரை 267 பேரிடம் விசாரணை
உதகை, ஜூலை 29- கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக இதுவரை 267 பேரிடம் விசா ரணை செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட் டில் கடந்த 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் 24 ஆம் தேதி கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதில், கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலிசார், சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக் கில் தொடர்புடைய ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து நீல கிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டு களாக விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், கொடநாடு சம்பவ வழக்கு விசாரணை மீண் டும் தீவிரமடைந்துள்ளது. இதன்படி மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர், கோவை சரக காவல் துறை தலைவர் முத்துசாமி ஆகியோரது நேரடி மேற் பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப் பட்டு இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை வெள்ளியன்று மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதர் முன்னிலை யில் விசாரணைக்கு வந்தது. இதில் சயான், வாளையாறு மனோஜ், ஜம்சீர் அலி, ஜிதின் ஜாய் ஆகிய 4 பேர் மட்டும் கோர்ட்டில் ஆஜ ராகினர். சாட்சிகளிடம் விசாரணை நடத்த அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப் பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதுகுறித்து அரசு தரப்பு சிறப்பு வழக்க றிஞர்களான ஷாஜகான், கனகராஜ் கூறுகை யில், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவ வழக்கில் இதுவரை 267 சாட்சிகளிடம் விசா ரணை முடிந்துள்ளது. சயான் குடும்பத்தினர் விபத்து குறித்தும், கனகராஜ் வாகன விபத்து குறித்தும் காவல் துறையினர் மற்றும் தடயவி யல் துறை மூலம் புலனாய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளதால் வழக்கு விசாரணைக்கு அவகாசம் கேட்கப்பட்டது. இதனைத்தொ டர்ந்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது, என்றனர்.
தக்காளி விலை சரிவு
சேலம், ஜூலை 29- சேலம் மார்க்கெட்டு களில் தக்காளி ஒரு கிலோ தற்போது 8 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த மாதத்தை விட வரத்து அதி கரித்துள்ளதாலும், ஆடி மாதம் என்பதால் திருமண நாட்கள் இல்லாததால் தேவை குறைந்ததன் காரண மாக, விலை குறைவு ஏற்பட் டுள்ளதாக விவசாயிகள் ெதரிவித்தனர். மற்ற காய்கறிகளின் விலை ஒரு கிலோவுக்கு வரு மாறு: உருளைக் கிழங்கு ஒரு கிலோ ரூ.34, சின்ன வெங்கா யம் 20, பெரிய வெங்காயம் 26, மிளகாய் 46, கத்திரி 24, வெண்டைக்காய் 16, முருங் கைக்காய் 20, பீர்க்கங்காய் 28, சுைரக்காய் 14, புடலங் காய் 22, பாகற்காய் 36, தேங் காய் 25, முள்ளங்கி 14, பீன்ஸ் 58, அவரை 34, கேரட் 70, மாங்காய் 40, மாம்பழம் 60, பப்பாளி 24, கொய்யா கிலோ ரூ.35க்கும் விற்பனையா கிறது.