சேலம், ஏப்.9- வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்.19 ஆம் தேதி மக்க ளவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சி யினர் பல்வேறு அமைப்பினர் தங்கள் ஆத ரவுகளை இந்தியா கூட்டணிக்கு செலுத்தி வருகின்றனர். அதன்ஒருபகுதியாக தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்ட மைப்பு இந்தியா கூட்டணி ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் மாநி லத் தலைவர் நாகா ஆர்.அரவிந்தன் தங்களது ஆதரவு கடிதத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், ராஜேந்திரன் எம்எல்ஏ முன் னிலையில் அளித்தார். இதைத்தொடர்ந்து சேலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந் திப்பில் ஆர்.அரவிந்தன் பேசுகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்ட ணிக்கு தங்கள் ஆதரவை அளிப்பது எனவும், குறிப்பாக தமிழகத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு நலவாரியம் ஏற்படுத்த வேண்டும். தமிழக அரசின் சலுகைகளை தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கும் விரை வில் கிடைத்திட வழிவகை செய்ய வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் குறித்து தமிழக முதல்வரிடம் எடுத்துரைக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.