ஈரோடு, ஜூலை 24- பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில், விவ சாயிகளுக்கான மூன்று நாள் தொழில்நுட்பப் பயிலரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் நிதி உதவியுடன் விவசாயிகளுக்கான கால்நடை வளர்ப்பில் தானியங்கி முறையின் பங்கு குறித்த தொழில்நுட்பப் பயில ரங்கம் நடைபெற்றது. இப்பயிலரங்கத்தில், கால்நடை வளர்ப் பில் தானியங்கி முறையின் பங்கு, பண்ணையில் பயன்படுத்தப் படும் நவீன தொழில்நுட்பம் பற்றி விளக்கப்பட்டது. மேலும், தானியங்கி சாதனங்கள் பயன்படுத்தப்படும் முறை, கால் நடை பண்ணையின் உற்பத்தித்திறன் மேம்படுத்த தேவை யான புதிய தொழில்நுட்ப அணுகுமுறைகள் மற்றும் இந்திய அரசாங்கம் அறிவித்த பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி விவ சாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில், கல்லூரியின் தாளாளர் ஏ.கே.இளங்கோ, முதல்வர் வீ.பாலுசாமி, மாணவர் நலன் முதன்மை ஒருங் கிணைப்பாளர் கே.கிருஷ்ணமூர்த்தி, இயந்திர மின்னணு வியல் துறையின் தலைவர் பி.மீனாட்சி பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.