districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் வெற்றி! வேலம்பாளையம் பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்

திருப்பூர், ஆக.12- அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவ மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியினர் திங்களன்று பெற்றோர் களுடன் பள்ளி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப் போது முதன்மை கல்வி அலுவலரு டன் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் ஆசிரியர்கள் நியமிப்பதற்கான உறுதியளித்தனர். அனுப்பர்பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 1200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி யர் பயின்று வருகின்றனர். மாணவர் களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரி யர்கள் எண்ணிக்கை இல்லை. என வேதான், 2023 - 2024 ஆம் கல்வி யாண்டில் நடந்து முடிந்த 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 160 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெறவில்லை. மேலும், பள்ளியில் இரவு காவலர் கள் இல்லாததால், சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. எனவே மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக ஆசிரியர்களை நிய மிக்க கோரி கடந்த மாதம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 15.வேலம்பாளையம் நகர குழு சார்பில் முதன்மை கல்வி அலுவல ரிடம் மனு அளிக்கப்பட்டது.  இந்நிலையில், மனு அளித்து ஒரு மாதம் ஆகியும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படாததால், ஆகஸ்ட் 12 ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பள்ளி முன்பு பெற்றோர்களுடன் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வேலம்பாளை யம் எ.கிளை செயலாளர் வி.வெள் ளியங்கிரி தலைமையில் பள்ளி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதில், மாவட்ட செயற் குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், நகரச் செயலாளர் ச.நந்தகோபால் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.  இதையடுத்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வேலம்பாளை யம் காவல் ஆய்வாளர், பள்ளித் தலைமை ஆசிரியர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், உடனடியாக 3 பட்டதாரி ஆசிரியர்களும், 2 உடற்கல்வி ஆசிரியர்களும் மாற்றுப்பணி மூலம் நியமனம் செய்து உத்த ரவு நகலை அளித்தனர். மேலும் அலுவலக உதவியாளர் மாற்று பணியில் நியமனம் செய்யப்பட் டுள்ளதாகவும், தூய்மைப் பணியா ளர்கள் மாநகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்படும். இரவுக் காவலர் நியமனம் செய்ய அரசுக்குப் பரிந் துரை செய்யப்பட்டுள்ளது. அது வரை  காவல்துறையின் மூலம் பாது காப்பு உறுதி செய்யப்படும் என்றும் எழுத்துப் பூர்வமாக தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் விலக் கிக் கொள்ளப்பட்டது. இதில், நகர குழு உறுப்பினர்கள் அ.ஆறுமுகம், பி.சின்னச்சாமி, த.நாகராஜன், ர.கவிதா, ஆர்.சுகுமார், அ.உமாநாத் மற்றும் கிளைச் செயலாளர்கள் வி.ஆர்.சரவணகுமார், த.சிவகுமார், செந்தில், ப.செல்வி, செல்வ குமார், ஏ.முத்துக்குமார், ராம்கி உள்ளிட்டோருடன், பெற்றோர்க ளும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.