சேலம், ஜூலை 30- அரிசி, தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட் களுக்கு வரி விதித்த மோடி தலைமையிலான ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, உதகை உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து நகர, ஒன்றிய, தாலுகா மட்டங் களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சிவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் சிறப்புரையாற்றினார். இதில் பாலமூர்த்தி, ராஜா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். சிபிஎம் குனியமுத்தூர் நகரக்குழுவின் சார்பில் சுந்தரா புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இடைக்குழுச் செய லாளர் நாகேந்திரன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ஆர். முருகேசன் கண்டன உரை யாற்றினார். இதில், இளங்கோ, சாந்தா உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர்.
எஸ்.எஸ்.குளம் ஒன்றிய சிபிஎம் சார்பில் சரவணம்பட்டி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்எஸ்.குளம் மேற்கு குழு செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, கோபால் ஆகியோர் உரையாற்றினர். தொண்டாமுத்தூர் ஒன்றியம் வடவள்ளி பேருந்து நிலைய ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.ஆறுச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் வி. மணி ஆகியோர் உரையாற்றினர். அன்னூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் சத்யராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.மனோ கரன் மற்றும் கே.அஜய்குமார் சிறப்புரை ஆற்றினர். இதில், அன்னூர் பேரூராட்சி மன்ற சிபிஎம் உறுப்பினர்கள் முசீர், மணி கண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சூலூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சூலூர் பேரூராட்சி ஏழாவது வார்டு மாமன்ற உறுப்பி னர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தெய்வேந்திரன் சிறப்புரையாற்றினார். இதில், சந்திரன், இருகூர் பேரூராட்சி உறுப்பினர் ஸ்டாலின் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோவை மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங் கேற்றனர்.
ஈரோடு
இதேபோன்று மார்க்சிஸ்ட் கட்சியின் அந்தியூர் தாலுகா சார்பில் ஜிஎச் கார்னர் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஏ.கே.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. தாலுகா செயலாளர் ஆர்.முருகேசன், போக்குவரத்து கட்சி தலைவர் ஜி.பழனிச்சாமி ஆகியோர் உரையாற்றினர். கிளைச் செயலாளர்கள் ஓ.எஸ்.பாட்டையன், பி.குருசாமி, கே.ஏ.குரு சாமி, எல்.செல்வராஜ், எஸ்.மாரிமுத்து, டி.மாரியப்பன் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். கோபி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கட்சியின் கோபி தாலுக்கா செயலாளர் யுவராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.எம். முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோன்று கடம்பூ ரிலும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
தருமபுரி
இதேபோன்று தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதி குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பாப்பாரப்பட்டி பகுதி குழு செயலாளர் ஆர்.சின்னசாமி தலைமை தாங்கினார். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சோலை அர்ஜுனன் கண்டன உரையாற்றினார். இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
சேலம்
நங்கவள்ளி பேருந்து நிலையம் முன் தாலுகா குழு உறுப் பினர் எஸ்,வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மு.பெரியண்ணன், கே.ராஜாத்தி உள்ளிட்டோர் உரை யாற்றினர். முன்னதாக முறத்தில் தவிடை கொட்டி அரிசியை தேடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்ககிரியில் நடைபெற்ற போராட்டதிற்கு தாலுகா செய லாளர் எ.ஆறுமுகம் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற் குழு உறுப்பினர் எஸ்.கே.சேகர் உள்ளிட்டு திரளானோர் பங் கேற்றனர். பெத்தநாயக்கன் பாளையம் இடைக்கமிட்டியில் நடை பெற்ற ஆ,ர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் காளிதாஸ், மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங் கேற்றனர். கொங்கணாபுரம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் ஒன்றிய செயலாளர் எஸ்.முத்துசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.சேகர் பங்கேற்றனர். எடப்பாடி பேருந்து நிலையம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு தாலுகா குழு உறுப்பினர் மூர்த்தி தலைமை தாங் கினார். இதில் தாலுகா செயலாளர் மு.பெரியண்ணன் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். சேலம் தாலுகா கொல்லப்பட்டியில் தாலுகா குழு உறுப் பினர் சுந்தரம் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் தாலுகா குழு உறுப்பினர் டி.பரமேஷ்வரி உள்ளிட்டு திரளா னோர் பங்கேற்றனர். தம்மம்பட்டி இடைக்கமிட்டி சார்பில் நடைபெற்ற போராட் டத்திற்கு இடைக்குழு உறுப்பினர் மணி தலைமை வகித்தார். இதில் செயலாளர் ஆர்.வெங்கடாச்சலம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.முருகேசன் உள்ளிட்டு திரளானோர் பங்கேற் றனர்.