தாராபுரம், மார்ச் 4- தாராபுரம் நகராட்சியில் தலைவர், துணைத்தலை வர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தாராபுரம் நகராட்சியில் செவ்வாயன்று தலைவர், துணை தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 2 ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாப்பு கண்ணன் நகராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 20 ஆவது வார்டில் காங் கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ரவிச்சந்திரன் துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து நகராட்சி தலைவராக பாப்புக் கண்ணனும், துணைத் தலைவராக ரவிச்சந்திரன் அறி விக்கப்பட்டனர். நகராட்சி ஆணையாளர் ராமர் இரு வருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சி யில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு, திமுக நகர செயலாளர் தனசேகர், வழக்கறி ஞர் அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வ ராஜ், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் செந்தில்குமார் ஆகி யோர் கலந்து கொண்டனர்.