தருமபுரி, ஜன.29- தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண் டும், என வலியுறுத்தி தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வரின் 2021 சட்டமன்ற தேர்தல் கால வாக்குறுதியான சத்து ணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதி யம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிகொடை, தொகுப்பூ தியத்தை ரத்து செய்து அனைத்து பணி யிடங்களையும் காலமுறை ஊதியத் தில் நிரப்ப வேண்டும். 10, 20, 30 ஆண்டு கள் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு தேக்கநிலை ஊதியம் அனைத்து மாவட்டத்திலும் உடனடியாக வழங்க வேண்டும். உதவியாளர்களுக்கு சமை யலர் பதவி உயர்வும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு அமைப்பாளர் பதவி உயர்வும் வழங்க வேண்டும். மேலும், சென்னையில் நடைபெறும் 24 மணி நேர உண்ணாவிரத இயக்கத்தை ஆதரித்து, தமிழ்நாடு சத்துணவு ஊழி யர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜி.வளர்மதி தலைமை வகித்தார். மாவட்டப் பொரு ளாளர் எம்.ராமன், துணைத்தலைவர் கள் டி.மஞ்சுளா, எம்.ஜெயலட்சுமி, கே. சங்கீதா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பழனிச்சாமி, அரசு ஊழி யர் சங்க மாவட்ட முன்னாள் செயலா ளர் ஏ.சேகர், சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் சி. காவேரி, அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் சக்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சத்து ணவு ஊழியர் சங்க சங்கத்தின் மாவட்டத் (பொ) தலைவர் எஸ்.லட்சுமி தலைமை வகித்தார். இதில் அரசு ஊழி யர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், நிர்வாகிகள் ஸ்ரீபதி, முருகப்பெருமாள், சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் கலாவதி, கவிதா, மகேஸ்வரி, அமுதா, லதா உட்பட பலர் கலந்து கொண்ட னர். கோவை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, மாவட்டத் தலைவர் ஏ.பானு லதா தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ப.சுதா மாவட்ட துணைத் தலைவர் பி.முருகன் ஆகியோர் உரை யாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எஸ் ஜெகநா தன் துவக்க உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ப.நடராஜன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே. என்.ராமசாமி, மாவட்டச் செயலாளர் பி.ராஜகோபால், தமிழ் நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வுதி யர் சங்க மாநிலத் தலைவர் என்.பழனி சாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் வி.செந்தில் குமார் நிரைவுரை யாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் பி.சுப்பிரமணி நன்றி கூறினார். இதில், திரளான சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். திருப்பூர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெயந்தி தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில், அரசு ஊழியர் சஙக மாவட்ட இணைச் செயலா ளர் ராமன் துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் எ.எலிச பெத் கோரிக்கைகளை விளக்கி பேசி னார். தமிழ்நாடு அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்ட அமைப்பாளர் எஸ்.முருகே சன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் எஸ்.அபி ராமி, திருப்பூர் மாநகர தலைவர் ஆர்.ஆதிலட்சுமி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மா.பாலசுப்பிர மணி நிறைவுரையாற்றினார். முடிவில் பி.தமிழ்ச்செல்வி நன்றி கூறினார். ஈரோடு ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் வருவாய் வாட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலை வர் பி.விஜயன் தலைமை வகித்தார். இதில், மாவட்டத் தலைவர் யு.பழனிச் சாமி. முன்னாள் மாவட்டப் பொருளா ளர் ஏ.முருகேசன், கோபி ஒன்றியச் செய லாளர் ஆர்.தமிழ்ச்செல்வி ஆகியோர் உரையாற்றினர். அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை செயலாளர் பெ.கதிரவன், ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன் வாடி ஊழியர் சங்கம் கே.ராஜன், கால்நடைத்துறை கே.கிருஷ்ணவேணி ஆகியோர் வாழ்த்தி பேசினர். நெடுஞ் சாலைத்துறை பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் சு.செந்தில்நாதன் நிறை வுரையாற்றினார். முடிவில், மாவட்டப் பொருளாளர் பாப்பாத்தி நன்றி கூறி னார்.