districts

img

இயந்திரங்களை பயன்படுத்தி மலக்குழி மரணங்களை தடுக்க ததீஒமு வலியுறுத்தல்

ஈரோடு, செப்.25- கழிவு நீர் தொட்டி, சாக்கடை அடைப்பு நீக்குதல் பணிகளுக்கு இயந்திரங்களை பயன்படுத்தி மலக்குழி மரணங்களை தடுக்க வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் ஈரோடு மாவட்ட மாநாட் டில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் ஈரோடு மாவட்ட 4 ஆவது மாநாடு ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் எம்.அண்ணாதுரை தலை மையில் நடைபெற்றது. மாவட்ட துணைத்தலைவர் ஏ.கே.பழனி சாமி அஞ்சலி தீர்மானத்தை வாசித் தார். நகர செயலாளர் வி.சுரேஷ் பாபு வரவேற்றார். ஆதித்தமிழர் பேரவையின் மாநில நிதி செயலா ளர் பெருமாவளவன், விசிக வடக்கு மாவட்ட செயலாளர் பெ.சா.சிறுத்தை வள்ளுவன், தமிழ்புலி கள் கட்சி மத்திய மாவட்ட செயலா ளர் இரா.சிந்தனைசெல்வன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டை துவக்கி வைத்து மாநில துணை செயலாளர் ச.நந்த கோபால் உரையாற்றினார். அறிக் கைகளை மாவட்ட செயலாளர் பி.பி.பழனிசாமி, பொருளாளர் சி.ஜோதிமணி ஆகியோர் முன் வைத்தனர். சிஐடியு மாவட்ட செய லாளர் எச்.ஸ்ரீராம், விதொச மாவட்ட  செயலாளர் கே.சண்முகவள்ளி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் பி.லலிதா ஆகியோர் வாழ்த்துரை யாற்றினர்.

இம்மாநாட்டில், சத்தியமங்க லம் அருகில் தோப்பூர் மக்கள் மற்றும் அந்தியூர் மந்தை பகுதியில்  தூய்மை பணியாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும்.  சிப் காட் வளாகத்தில் பட்டியல் இனத் தவர்களை தொழில் முனைவோ ராக்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தொழிற்கூடங்களை செயல்பாட் டிற்கு கொண்டு வந்து பயனாளிக ளுக்கு ஒதுக்க வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்பவர்க ளுக்கு வன்கொடுமை வழக்கு களில் கிடைக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் தனி சட்டம்  இயற்ற வேண்டும். கழிவு நீர் தொட்டி, சாக்கடை அடைப்பு நீக்கு தல் உள்ளிட்ட பணிகளுக்கு இயந் திரங்களைப் பயன்படுத்தி மலக் குழி மரணங்களை தடுக்க வேண் டும். பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டி யலினத்தவர்களுக்கு வழங்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஈரோடு மாவட்ட தலைவராக பி.பி.பழனி சாமி, செயலாளராக எம்.அண்ணா துரை, பொருளாளராக சி.ஜோதி மணி உட்ட 37 பேர் கொண்ட மாவட் டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநில துணைத்தலைவர் ஜி. ஆனந்தன் நிறைவுரையாற்றினார். முடிவில் நகர தலைவர் ஓ.முருகன் நன்றி கூறினார். முன்னதாக, இந் நிகழ்ச்சியில் ஈரோடு நாடக கொட் டகை கலைஞர்களின் கலை நிகழ்ச் சிகள் நடைபெற்றன.

;