உதகை, ஏப்.26- பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி உதகை எருமாடு பகுதி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகாவிற்குட்பட்ட எருமாடு அருகே உள்ளது வெட்டுவாடி. இங் குள்ள அரசு கூட்டுறவு சங்க நிலத் தில் ஏராளமான பொதுமக்கள் 55 ஆண்டுகளுக்கும் மேலாக குடியி ருந்து வருகின்றனர். மேலும், அவர் கள் தேயிலை, பாக்கு, தென்னை, மிளகு, காபி, வாழை உள்ளிட்ட வற்றை பயிரிட்டு விவசாயம் மேற் கொண்டு வருகின்றனர். இந்த நிலத் திற்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருவாய்த் துறைக் கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அப் பகுதி பொதுமக்கள் தொடர்ந்து மனு அளித்து வந்தனர். மேலும், பல் வேறு போராட்டங்களுக்கு பின்னர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நில அளவை செய்யப்பட்டது. மேலும், ஆவணங்களும் பெறப்பட் டது. ஆனால் இதுவரை பட்டா வழங் கப்படவில்லை. இந்நிலையில், பட்டா கேட்டு வெட்டுவாடியில் அப்பகுதி பொது மக்கள் உண்ணாவிரதப் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவ லறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினர் போராட்டக் காரர்களிடம் பேச்சுவார்த்தை மேற் கொண்டனர். ஆனால், உயர் அதிகா ரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்தால்தான் போராட் டத்தை கைவிடுவோம் என்று பொது மக்கள் தெரிவித்தனர். இதன்பின் கூடலூர் வட்டாட்சியர் சரவண கண் ணன், தேவாலா துணை கண்கா ணிப்பாளர் ராமலிங்கம், காவல் ஆய்வாளர் திருஞான சம்பந்தம், பந்தலூர் வட்டாட்சியர் நடேசன், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வருவாய்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள விண் ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினால், அதை சரிபார்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.