நாமக்கல், ஜன.2- குமாரபாளையம் அரசு மருத்துவ மனைக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் சார் பில், ரூ.10 லட்சம் மதிப்பிலான நவீன மருத் துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில், விசைத்தறி தொழிலும் அதற்கு அடுத்தபடி யாக விவசாயமும் விளங்கி வருகிறது. இதில் பெரும்பாலும் தொழிலாளர்கள் நிறைந்த பகு தியாகும். இப்பகுதியில் வசிக்கும் ஏழை மற் றும் நடுத்தர மக்கள் தங்கள் உடல்நல பாதிக் கப்பட்டால் குமாரபாளையம் அரசு மருத்துவ மனையை நாட வேண்டியுள்ளது. தினசரி சுமார் 2 ஆயிரம் புறநோயாளிகளும், 150க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனை யில் மகப்பேறு, ஒட்டுக்குடல் மற்றும் பிற நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய் யும் பொழுது மயக்க மருந்து செலுத்தும் வசதி மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் நோயாளிகள் சிரமப்பட்டு வரும் சூழல் இருந்து வந்ததால் குமாரபாளையம் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் பாரதி, தன்னார்வலர்களிடம் குமாரபாளையம் அரசு மருத்துவமனை நவீன மயக்கம் பெற அதற் கான உபகரணங்கள் தேவை என கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க, குமாரபாளை யம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறு வனங்கள் நடத்தி வரும் அறக்கட்டளை நிர்வா கிகள், குமாரபாளையம் அரசு மருத்துவ மனைக்கு அறுவை சிகிச்சைக்கு தேவை யான ரூ.10 லட்சம் மதிப்பிலான அதிநவீன மயக்க மருந்துகள் செலுத்தும் இயந்திரத்தை புதனன்று வழங்கினர். இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவ அலுவலர் பாரதி மற்றும் தனியார் கல்வி நிறுவனத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.