நாமக்கல், பிப்.28- குமாரபாளையம் அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க கிளை அமைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்துள்ள ஸ்ரீபண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்டும் தொழிலாளர்களை, கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் துரைசாமி, பொன்னி சர்க்கரை ஆலை சங்க செயலாளர் குருசாமி ஆகியோர் வெள்ளியன்று சந்தித்து பேசினர். இக்கூட்டத்தில், கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு, மாநில அளவில் ஒரே மாதிரியான கூலியை நிர்ணயம் செய்ய வேண்டும். அதனை ஆலை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்ஐசி குழு காப்பீடு திட்டத்தை ஆண், பெண் தொழிலாளர்களுக்கு அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத் தின் வாயிலாக புதிய கிளை அமைக்கப்பட்டது. இதன் தலைவ ராக சேகர், செயலாளராக முத்து, பொருளாளராக விஜய் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.