districts

img

தெரு நாய்களால் வேட்டையாடப்படும் வளர்ப்புக் கால்நடைகள் திருப்பூர் மாவட்டத்தில் தொடரும் அவலம்; விவசாயிகள் வேதனை

திருப்பூர், அக். 15 - திருப்பூர் மாவட்ட கிராமப்புறப்  பகுதிகளில் தெரு நாய்களால் விவசா யிகளின் வளர்ப்புக் கால்நடைகள் வேட்டையாடப்படுவது தொடர் கதை யாகி வருகிறது. ஏற்கெனவே மாவட்ட நிர்வாகத்திடம் இந்த பிரச்ச னைக்குத் தீர்வு காணவும், இழந்த கால்நடைகளுக்கு நிவாரணம் வழங் கவும் வற்புறுத்தியுள்ள நிலையில் மேலும் இரு இடங்களில் ஆடுகளை  தெரு நாய்கள் வேட்டையாடியுள் ளன. திருப்பூர் மாவட்டத்தில் கிராமப்பு றங்களில் விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளைத் தெரு நாய் கள் கடித்துக் கொன்று இரையாக்கி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து விவசாயிகள் பல  முறை புகார் செய்தும், போராட்டங் கள் நடத்தியும், தெரு நாய்கள் தாக்கு தலைக் கட்டுப்படுத்தவும், கால்நடை களை இழந்ததால் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை சமாளிக்க இழப்பீடு வழங்கவும் அரசு நிர்வா கம் நடவடிக்கை எடுக்காமல் உள் ளது. கடந்த மாதம் நடைபெற்ற திருப் பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் இப்பிரச்சனை பெரிதாக  வெடித்தது. காங்கேயம், வெள்ள கோவில் வட்டார விவசாயிகள், வெறி நாய்கள் தாக்குதலில் உயிரிழந்த கால்நடைகளைக் கொண்டு வந்து போராடுவதற்குத் தயாரானார்கள். எனினும் காவல் துறையினர் தடுத்து  இறந்த கால்நடைகளை வேறிடத்தில்  வைத்துவிட்டு விவசாயிகளை ஆட்சி யரகத்திற்குள் அனுப்பி வைத்தனர். அதன்பிறகு இழந்த கால்நடை களுக்கு உரிய இழப்பீடு தருவதற்கு அரசுக்குப் பரிந்துரைத்து மாவட்ட ஆட்சியர் மாநில அரசுக்குக் கடிதம் அனுப்பினார். இந்த நிலையில் சேனாபதிபா ளையம் கிராமம் சக்திபாளையத்தில்   பிரகதீஸ்வரன் என்பவரது ஆட்டுப் பட்டியில் திங்களன்று இரவு நாய்கள்  புகுந்து மூன்று ஆட்டுக்குட்டிகளைக் கொன்றுவிட்டு, ஒரு குட்டியை தூக்கிக் கொண்டு சென்றுவிட்டன. மேலும் ஒரு ஆட்டுக்குட்டி  உயிருக்கு  ஆபத்தான நிலையில் கிடந்தது.  இது குறித்து அப்பகுதி விவசாயி கள், கிராம நிர்வாக அதிகாரிக்குத் தக வல் தெரிவித்துள்ளனர். அவரும் அங்கு பார்க்க வந்ததாக விவசாயி கள் கூறினர். அத்துடன் கால்நடை  மருத்துவர் இறந்த ஆட்டுக்குட்டியை  உடற்கூராய்வு செய்வதற்கு வந்தி ருக்கிறார். இந்த சம்பவம் நடை பெற்ற நிலையில் செவ்வாயன்று அதி காலை ஆலாம்பாடி குப்பகவுண்டன் வலசு கிராமத்தில் பெரிய தோட்டம் பெரியசாமி என்பவருடைய தோட் டத்தில் தெரு நாய்கள் இரண்டு ஆட்டு  குட்டிகளைக் கடித்துக் கொன்றிருக் கின்றன. இதனால் விவசாயிகள் பெரி தும் வேதனை அடைந்துள்ளனர். இச் சம்பவத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று விவசாயி கள் வலியுறுத்துகின்றனர்.