districts

img

விசைத்தறி தொழிலாளர்களின் தொடர் போராட்டம் வெற்றி

பள்ளிபாளையம், மே 21- நாமக்கல் மாவட்ட விசைத் தறி தொழிலாளர்களின் தொடர் போராட்டம் விளைவாக 10 சத விகிதம் கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் சுற்றுவட்டார பகுதி களில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி  வருகின்றன. இதில் நேரடியா கவும், மறைமுகமாகவும் ஒரு  லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இந்த விசைத்தறி தொழிலாளர் களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய கூலி உயர்வு  வழங்கப்படும். இந்நிலையில்  26 மாதங்கள் கடந்த நிலையில்,  புதிய கூலி உயர்வு ஒப்பந்தம்  ஏற்படவில்லை. இதையடுத்து,  விசைத்தறி தொழிற்சங்கத்தினர்  75 சதவிகித கூலி உயர்வு உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந் தனர்.  இந்நிலையில், பள்ளி பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் விசைத்தறி தொழிற் சங்கங்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்களுடன் கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடை பெற்று வந்தது. இதில், ஆறு சுற்று  பேச்சுவார்த்தை கடந்த நிலையில்,  எவ்வித ஒப்பந்தமும் ஏற்பட வில்லை. இதையடுத்து, மே 22 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என  சிஐடியு அறிவித்திருந்தது. இந்நிலையில், ஞாயிறன்று பள்ளிபாளையம் காவல் ஆய் வாளர் சந்திரகுமார் தலைமையில், விசைத்தறி உரிமையாளர்கள்  மற்றும் விசைத்தறி தொழிற்சங் கங்களான சிஐடியு, ஏஐடியுசி,  ஏஐசிசிடியு நிர்வாகிகள்  பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தொழிற் சங்க நிர்வாகிகள், தற்போதைய  பொருளாதார நிலைக்கு ஏற்ப  விசைத்தறி தொழிலாளர்களின்  வருவாய் இல்லை. இதனால் தொழி லாளர்கள் வறுமைக்கு தள்ளப் பட்டுள்ளனர். இதை கருத்தில்  கொண்டு கூலி உயர்வு வழங்கு வது மிகவும் அவசியமான ஒன்று என வலியுறுத்தினர். 

இந்த பேச்சுவார்த்தை  சுமார் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. பேச்சு வார்த்தையின் நிறைவாக, பள்ளிபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து பிரிவு விசைத்தறி தொழி லாளர்களுக்கும் 10 சதவிகித கூலி  உயர்வு வழங்குவதென முடி வானது. இதன் அடிப்படையில் 1.6.2023 முதல் 31.5.2024 வரை ஏழு  சதம் கூலி உயர்வும், 1.6.2024 முதல்  1.6.2025 வரை மூன்று சதவிகிதம்  சேர்த்து 10 சதவிகித கூலி தருவது  என பேச்சுவார்த்தையில் உடன் பாடு ஏற்பட்டது. இந்த ஒப்பந்த மானது இரண்டு ஆண்டுகளுக்கு  அமலில் இருக்குமென என தெரி விக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விசைத்தறி தொழிற்சங்கம் மற்றும் விசைத்தறி  உரிமையாளர்கள் கூலி உயர்வு  ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு களுக்கு மேலாக விசைத்தறி தொழி லாளர்களின் ஒன்றுபட்ட போராட் டத்தின் மூலமாக கூலி உயர்வு ஏற் பட்டுள்ளது. இந்த புதிய கூலி  ஒப்பந் தத்தின் காரணமாக விசைத்தறி தொழிலாளி மாதத்திற்கு சராசரி யாக  ரூ.1200 முதல் ரூ.1500 வரை கூடுதல் வருவாய் பெறுவார்கள் என சிஐடியு தலைவர்கள் தெரி வித்தனர். இதையடுத்து, சிஐடியு சார்பில்  அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டம் விலக்கி கொள்ளப் பட்டது.