சேலம், பிப்.12- சேலம் மாவட்டத்திலுள்ள பஞ்சு மிட்டாய் தயாரிக்கும் நிறுவனங்களில் உணவு பாது காப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண் டனர். உணவுப்பொருளுக்கு அனுமதிக்கப் படாத நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளதா? என் றும், அனுமதிக்கப்பட்ட அளவில் நிறமிகள் உள்ளதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டு வரு கிறது. அதன்படி, திங்களன்று சேலத்தி லுள்ள ரிலையன்ஸ் மால் மற்றும் பெங்களூரு நெடுஞ்சாலையிலுள்ள பஞ்சு மிட்டாய் தயா ரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் கதிரவன், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவலிங்கம் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். உணவு மாதிரி பகுப் பாய்வு அறிக்கையின் அடிப்படையில் நடவ டிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.