districts

img

குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் காலை உணவுத் திட்டம் குறித்து ஆய்வு

தாராபுரம், நவ.19- திருப்பூர் மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தில் முத லமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் தாராபுரம் வட்டத் திற்குட்பட்ட பகுதிகளில் புதிய திட்ட பணிகள் குறித்து வெள்ளி யன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம் முன்னிலையில் ஊரக  வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு சிறப்பு செயலர் திருப் பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.கருணாகரன், திருப் பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு புதிய  திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். திருப்பூர்  மாவட்டம் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் ஜோதியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சேடபாளையம் ஊராட்சி  ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் முதலமைச்ச ரின் காலை உணவு திட்டத்தினை ஆய்வு மேற்கொண்டு சமை யல் கூடங்கள்  முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட  செயலியை பதிவேற்றம் செய்வது குறித்து ஆய்வு மேற் கொண்டும் ஜோதியம்பட்டி ஊராட்சியில் ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தனிநபர் இல்ல குடி நீர் இணைப்புகளையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அ.லட்சுமணன், தாராபுரம் கோட்டாட்சியர்  குமரேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்து ணவு) சிவசண்முகம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர்  கலந்து கொண்டனர்.