districts

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

அரசியல் கருத்துக்களை பேச, பரப்ப தடை அரசியலமைப்பு உரிமைகளை பறிக்கும் பெரியார் பல்கலை.க்கு மாணவர் சங்கம் கண்டனம்

சென்னை, ஜூன் 2-  அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மாணவர்களிட மிருந்து பறிக்கும் சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் நடவடிக்கையை இந்திய மாண வர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலை வர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் சுற்றறிக்கையில், “பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு  பெற்ற கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர் கள் பல்கலைக்கழகம், கல்லூரி வளாகத் தில் அரசியல் சார்ந்த பரப்புரை மேற்கொள் வதை முற்றிலுமாக தடைசெய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  இது பெரியார் பெயரில் அமைந்த பல்க லைக்கழக நிர்வாகம் அவருக்குச் செய்யும் அவமரியாதை. மாணவர்கள் அரசியல் பரப் புரையில் ஈடுபடக்கூடாது என்றால் அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், புவியியல், பொருளாதாரம், மனித உரிமை, பெண்ணு ரிமை, சமூகவியல்  போன்ற பாடங்களை பல் கலைக்கழகம் நடத்தாமல் நிறுத்திக் கொள் ளுமா? பல்வேறு ஊழல் முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் மாணவர் களின் உரிமைகளை பறிப்பது நியாயமா? அரசியல் அமைப்பு சட்டம் பிரிவு பல்வேறு ஜனநாயக உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனால், பெரியார் பல்கலைக்கழகம் இதை தடை செய்வதாக அறிவித்திருப்பது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான தாகும். எனவே பல்கலைகழக துணை வேந் தர் மற்றும் பதிவாளர் மீது உடனடியாக “அரசியலமைப்புச் சட்ட உரிமைகளை அவ மதிப்பது” என்ற வகையின் கீழ் சட்டரீதியான  நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். பெரியார் பெயருக்கு களங்கம் விளைவிக் கும் இத்தகைய செயலின் மீது தமிழக உயர் கல்வித்துறை அமைச்சரும், முதல்வரும் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

சிறுமியை பலாத்காரம் செய்து கருமுட்டை விற்பனை - 3 பேர் கைது

ஈரோடு, ஜூன் 3- ஈரோட்டில் சிறுமியை பாலியல் பலாத் காரம் செய்து 8 முறை கருமுட்டையை விற் பனை செய்ய வைத்த வழக்கில் தாய் உள் ளிட்ட 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்த 38 வயது பெண்ணுக்கு 16 வயதில் சிறுமி உள்ளார். கணவரை பிரிந்த அப்பெண்  ணுக்கு ஈரோட்டை சேர்ந்த ஒருவருடன் பழக் கம் ஏற்பட்டு, அப்பெண் தனியார் மருத்துவ மனைகளில் தனது கருமுட்டையை சட்ட விரோதமாக விற்பனை செய்துவந்துள் ளார். இதற்கிடையே ஆண் நண்பர் சிறுமியை  பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின் னர் போலி ஆவணத்தை தயார் செய்து பல தனியார் மருத்துவமனைகளுக்கு சிறு மியை அவரது தாயும், தரகர் மாலதியும் அழைத்து சென்று கருமுட்டையை விற் பனை செய்து உள்ளனர். இதற்காக கரு முட்டை கொடுத்த சிறுமிக்கு ஒவ்வொரு முறையும் ரூ.20 ஆயிரமும், தரகராக செயல் பட்ட மாலதிக்கு கமிஷனாக ரூ.5 ஆயிர மும் மருத்துவமனையின் சார்பில் வழங்கப் பட்டு உள்ளது. இந்நிலையில் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்த தால், சிறுமி கடந்த 20 ஆம் தேதி வீட்டில்  இருந்து வெளியேறி சேலத்தில் உள்ள உற வினர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். இத னைத்தெரிந்த சிறுமியின் தாய் மற்றும் தொடர்பில் இருந்த ஆண் நண்பருடன் சேலத்துக்கு சென்று சிறுமியை அழைத்து செல்ல வந்துள்ளனர். இதுகுறித்து சிறுமி யின் உறவினர்கள் ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள் ளனர். இதனை விசாரித்த காவல்துறையினர் சட்டவிரோதமாக கருமுட்டையை விற் பனை செய்ததும், பாலியல் பலாத்காரம் செய்து கருமுட்டையை விற்பனை செய்த தும் விசாரணையில் தெரியவந்தது. இதனை யடுத்து சிறுமியின் தாய் உட்பட 3 பேரை போக்சோ உட்பட 10 பிரிவுகளின் கீழ் போலீ சார் வழக்குப்பதிவு செய்து கைது செய்த னர்.

பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி

சேலம், ஜூன் 3- தம்மம்பட்டியில் வெள்ளியன்று காலை புறப்படவிருந்த 4 அரசு பேருந்துகள்  இயக்கப்படாமல் பேருந்து நிலையத்தி லேயே நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணி கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து வெள்ளியன்று காலை 6.45 மற்றம் 7 மணிக்கு ஆத்தூருக்கு புறப்பட வேண்டிய 11 மற்றும் 17 ஆகிய எண் கள் கொண்ட இரு அரசு நகர பேருந்து கள் மற்றும் 7.30 மணிக்கு கெங்கவல்லி வழி யாக ஆத்தூருக்கும், 8.30 மணிக்கு சேலம் –  துறையூருக்கு இயக்க வேண்டிய அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இது குறித்து பேருந்து பயணிகள் கூறுகையில், நடத்துநர்கள் இல்லாததால் மேற்கண்ட 4 பேருந்துகளும் தம்மம்பட்டி பேருந்து நிலை யத்தில் வெறுமெனே நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது. இதனால், ஆத்தூர், கெங்கவல்லி,  சேலம், துறையூர் ஆகிய பகுதிகளுக்கு செல் வதற்காக, தம்மம்பட்டி பேருந்து நிலையத் தில் காத்திருந்த பயணிகள் பெரிதும் அவ திக்குள்ளாகினர்.

தங்கத்துடன் நகைப்பட்டறை உரிமையாளர் தலைமறைவு

கோவை, ஜுன் 3- நகைப்பட்டறை உரிமையாளர் ஒரு கிலோ தங்கத்து டன் தலைமறைவானதால், ஆபரணம் செய்ய தங்கம் கொடுத்த வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவை சேர்ந்தவர் சுஜித் மொய்தி. கோவை செட்டி வீதியில் கடந்த பல ஆண்டு களாகத் தங்கி, நகைப்பட்டறை நடத்தி வந்தார். அவரிடம் வட மாநில தொழிலாளர்கள் ஐந்து பேர் பணியாற்றி வந்தனர். சுஜித் மொய்தியிடம் கோவையைச் சேர்ந்த பல நகைக்கடை  உரிமையாளர்கள், வியாபாரிகள் தங்கத்தைக் கொடுத்து ஆபரணங்களாக செய்து வாங்குவது வழக்கம். கடந்த மே 26 ஆம் தேதி முதல் சுஜித் மொய்தி நகைப்பட்ட றையை மூடி சென்றவர் திரும்பவே இல்லை. இதற்கிடையே அவரிடம் வியாபாரிகள் பலர் ஆபரணம் செய்ய சுமார் ஒரு  கிலோ தங்கம் வரை கொடுத்துள்ளனர். இந்நிலையில் தங்கத்துடன் சுஜித் மொய்தி தலை மறைவு ஆனாதாக தகவல் பரவியது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட நான்கு பேர் சுஜித் மொய்தி மீது பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிநீர், சாக்கடை வசதி கேட்டு ஜமாபந்தியில் மனு

தாராபுரம், ஜுன் 3- தாராபுரம் சிபி கார்டனில் உள்ள பொதுமக்களுக்கு குடி நீர், சாக்கடை வசதி கேட்டு ஜமாபந்தியில் மனு அளிக்கப்பட் டுள்ளது. தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தாராபுரம் வட்டாச்சியர் அலுவலகத்தில் நடை பெற்று வருகிறது. இந்த ஜமாபந்தியில் சிபி கார்டன் குடியி ருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் சங்கத்தின் தலைவர் என். கனகராஜ் தலைமையில் சாக்கடை மற்றும் குடிநீர் வசதி  கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் தாராபுரம்  வட்டம், கவுண்டச்சிபுதுர் ஊராட்சிக்குட்பட்ட சிபிகார்டனில்  70 க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு  சாக்கடை மற்றும் குடிநீர் வசதி இல்லை. எனவே தமிழக  அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சாக்கடை அமைக்க  அனுமதியளித்து அதற்கு உண்டான தொகையை ஆய்வு செய்து தெரிவித்தால் நாங்கள் அந்த தொகையை செலுத்தி  சாக்கடை வசதி செய்து கொள்கிறோம். மேலும் இந்த குடியி ருப்பு பகுதியில் குடிநீர் வசதி இல்லை. எனவே வீடுகளுக்கு  தனித்தனியாக ஆற்று குடிநீர் இணைப்பு வழங்கவேண்டும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் ரூ.30.35 கோடியில் புதிய திட்டப் பணிகள் தொடக்கம்

திருப்பூர், ஜூன் 3– தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த  நாளான வெள்ளிக்கிழமை திருப்பூர் மாநகராட்சியில் ரூ.30  கோடியே 35 லட்சம் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அத்துடன் ரூ.38 லட்சத்து 30  ஆயிரம் மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகளும் தொடங்கி  வைக்கப்பட்டன.  மேலும் குடிநீர் திட்டப் பணிகள் ரூ.4 கோ டியே 20 லட்சம் மதிப்பில் அர்ப்பணிக்கப்பட்டு, நலத் திட்ட  உதவிகள் ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்பிலும் வழங்கப்பட் டன.

தூய்மைப்பணி முகாம்

45ஆவது வார்டு செல்லாண்டியம்மன் துறை வீட்டு வசதி  வாரிய குடியிருப்பில் இந்த முகாமை மேயர் தினேஷ்கு மார் தொடக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத்,  மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி, எம்.எல்.ஏ.  க.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனை வரும் தூய்மைப் பணி உறுதிமொழி ஏற்றனர். சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் வகையில்  மாநக ராட்சியில் உள்ள அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை யங்களிலும் இந்த முகாம் நடைபெறுகிறது. ஜூன் 11, ஜூன்  25 ஆகிய இரு சனிக்கிழமைகளில் திருப்பூர் மாநகராட்சி பகு திகளில் நடைபெறுகிறது.

பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தில் கடன் பெற ஆட்சியர் அழைப்பு

திருப்பூர், ஜூன் 3– தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம்  பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கடன் பெற்றுக் கொள்ளுமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் வெள் ளிக்கிழமை அழைப்பு விடுத்துள்ளார். மேற்கண்ட வகுப்பினரில் ஆண்டு வருமானம் ரூ.3  லட்சத்துக்கு மிகாமல் இருப்போர், 18 வயது பூர்த்தி அடைந்து  60 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம்  ரூ.15 லட்சம் வரை வழங்கப்படும். ஆண்டு வட்டி 6 சதவிகிதம்  முதல் 8 சதவிகிதம் வரை வசூலிக்கப்படும். பெண்களுக்கு புதிய பொற்கால கடன் திட்டத்தில் ரூ.2 லட்சம் வரை 5  சதவிகித வட்டியில் கடன் வழங்கப்படும். சிறுகடன் வழங்கும்  திட்டத்தில் சுயஉதவிக் குழு மகளிருக்கு அதிகபட்சம் ரூ.1  லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.15 லட்சம்  வரையும் வழங்கப்படும். ஆண்டு வட்டி விகிதம்  4 சதவிகிதம் வசூலிக்கப்படும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்  மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளில் கடன் விண்ணப்பம்  பெற்று சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியில் ஒப்படைக்க வேண்டும். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவல கத்தை 0421 2999130 என்ற தொலைபேசி மூலமும், dbcwotpr@gmail.com வாயிலாக தொடர்பு கொள்ள லாம். திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதியுடையோர் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி ஆட்சியர்  வினீத் கேட்டுக் கொண்டுள்ளார்.

திருப்பூரில் சிறுகதைப் பட்டறை: எழுத விரும்புவோருக்கு அழைப்பு

திருப்பூர், ஜூன் 3- பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும், சிறுகதை எழுத  விரும்புகிறவர்களுக்குமான பயிற்சிப் பட்டறை திருப்பூரில்  வரும் 12ஆம் தேதி நடத்தப்படுகிறது. திருப்பூர் மக்கள் மாமன்றம் நடத்தும் இம்முகாமில் தமிழ்  சிறுகதை வரலாறு முதற்கொண்டு சிறுகதை எழுதுவது வரை யிலான பயிற்சி இடம் பெறும். ஜூன் 12 காலை 10 மணிக்கு  டைமண்ட் திரையரங்கு அருகில் மக்கள் மாமன்ற நூலகத் தில் நடைபெறும் இவ்வகுப்பில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணி யன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.  சிறுகதை எழுதும்  முயற்சிகளில் ஈடுபட்டிருந்தால் அதன் பிரதிகளைக் கொண்டு வரலாம். மக்கள் மாமன்ற நிறுவனத் தலைவர் சி.சுப்ரமணியன் (செல்: 93457 20140) எண்ணில் பெயர்ப்பதிவு  செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய மின் தடை

அவிநாசி, ஜூன் 3- சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கரு மாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பி யாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாச புரம், முத்துசெட்டிபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத் துப்பாளையம், சேவூர் சாலை, வ.உ.சி.காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபுதூர், சக்தி நகர், எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளை யம் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

இருசக்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

அவிநாசி, ஜூன் 3- அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். திருப்பூர்  மாவட்டம் ஊத்துக்குளி செட்டிபாளையம் பகு தியைச் சேர்ந்தவர் மகன் பிரதாப் (27). கடந்த 27-ம் தேதி இரு சக்கர வாகனத்தில்  குன்னத்தூர் தனியார்ப் பள்ளி அருகே  உள்ள சாலை மையத்தடுப்பின் மீது  மோதி விபத்துக்குள் ளானார். இதையடுத்து பிரதாப் படுகாயம் அடைந்த நிலை யில் தனியார் மருத்துவமனையில், கடந்த 27-ம் தேதி அனும திக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழ னன்று உயிரிழந்தார். இது தொடர்பாக குன்னத்தூர் காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருப்பூரில் குடிபோதையில் தகராறு ஒருவர் கொலை

திருப்பூர், ஜூன் 3 - திருப்பூர் செவந்தாம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்த வர் சுரேஷ் (வயது29). இவரது நண்பர்கள் கே. செட்டிப்பாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ், மணிகண் டன், குணா, அறிவுபிரகாஷ், பிரவீன்குமார். வியாழ னன்று இரவு சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து சந்திராபுரம் அருகே உள்ள டாஸ்மாக் மது  பாரில் மது அருந்தினர்.  அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சுரேஷுக்கு எதிராக ஐந்து பேரும் சேர்ந்து தகராறு செய்த னர். ஆத்திரத்தில் அவரை ஐந்து பேரும் சரமாரியாக வெட் டினர்.  இதில் தலையில் பலத்த வெட்டு விழுந்து சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர்அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுரேசை கொலை  செய்த அவரது நண்பர்கள் ஐந்து பேரையும் பிடித்து காவல்  துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதார் பதிவில் கைரேகை புதுப்பித்தல் சிறப்பு முகாம்

திருப்பூர், ஜூன் 3 - திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டாட் சியர் அலுவலகங்களிலும், எல்காட் மையங் களிலும் சனிக்கிழமை ஆதார் பதிவில் கைரேகை புதுப்பித்தல் சிறப்பு முகாம் நடை பெறுகிறது. பயோ மெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்குவதை அதிகப்படுத்தும் நோக்கத் தில் சனியன்று காலை 10 மணி முதல் மாலை  5 மணி வரை பின்வரும் இடங்களில் இந்த  முகாம் நடைபெறுகிறது. அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம், தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகம், வட் டாட்சியர் அலுவலகம், காங்கேயம் வட்டாட் சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகம், வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம், மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகம், பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம், நக ராட்சி அலுவலகம், திருப்பூர் வடக்கு  வட்டாட்சியர் அலுவலகம், தொட்டிபாளை யம் (நஞ்சப்பா நகர்) மண்டல அலுவலகம், திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், நல்லூர் மண்டல அலு வலகம், மாநகராட்சி அலுவலகம், உடு மலை வட்டாட்சியர் அலுவலகம், உடுமலை  நகராட்சி அலுவலகம், ஊத்துக்குளி வட்டாட் சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் இந்த  முகாம் நடைபெறுகிறது. நியாயவிலைக் கடைகளில் கைரேகை  பதிவு விழாத காரணத்தால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப் படும் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளி கள் மட்டும் இதில் கலந்து கொண்டு, தங்க ளது ஆதார் கார்டில் கைரேகை பதிவினை  புதுப்பித்து சிரமம் இல்லாமல் பொருட் களை வாங்கிப் பயனடையலாம் என்று திருப்பூர் மாவட்ட வழங்கல் அலுவலர் முரு கன் கூறியுள்ளார்.

எம்.பி. நிதியில் தரை அமைக்கும் பணி

திருப்பூர், ஜூன் 3 - திருப்பூர் மாநகராட்சி போயம்பா ளையம் நடுநிலைப் பள்ளியில் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14.90 லட்சத்தில் பேவர்  பிளாக் தரை அமைக்கும் பணி தொடங் கப்பட்டது. வெள்ளியன்று போயம்பாளையம் நடு நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி யில் கே.சுப்பராயன் கலந்து கொண்டு பணி யை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநக ராட்சி இரண்டாவது மண்டல உதவி ஆணை யாளர் கண்ணன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநி லக் குழு உறுப்பினர் கே.காமராஜ், சிபிஐ நிர் வாகிகள் மோகன், சசிகுமார், மாமன்ற உறுப் பினர் கவிதா விஜயகுமார், பள்ளி தலைமை ஆசிரியை ரோசாலி புளோரா மற்றும் ஆசி ரிய, ஆசிரியைகள் திரளாக கலந்து கொண்ட னர்.

நடக்க இருப்பவை

உடுமலைபேட்டை தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் திருப்பூர் மாவட்ட அமைப்பு பேரவை நாள்: சனிக்கிழமை  நேரம்: காலை 10 மணி இடம்: ஸ்டாலின் நிலையம் உடுமலைபேட்டை தலைமை: ஏ.ராஜகோபால் (வி.ச. துணைத் தலைவர்) பங்கேற்போர்: ஏ.விஜயகுமார் (மாநில அமைப்பாளர்) எஸ்.ஆர்.மதுசூதனன் (மாவட்டத் தலைவர் வி.ச.) ஆர்.குமார் (மாவட்டச் செயலாளர் வி.ச.) எஸ்.பரமசிவம் (மாவட்ட அமைப்பாளர், பால் உற்பத்தியாளர் சங்கம்)