கோவை, செப்.30- கோவையில் மாநில அளவிலான எறிபந்து போட்டியில் ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு மாநில எறிபந்து கழகம், கோவை மாவட்ட எறி பந்து கழகம் இணைந்து கோவையில் 21ஆவது மாநில அளவி லான சீனியர் எறிபந்து போட்டியை கடந்த 28ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. போட்டியை கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, கன்னியாகுமரி உட்பட 38 மாவட்டங் களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட வீரர், வீராங்கனை கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். தமிழ்நாடு எறிபந்து கழகத்தின் தலைவரும், இந்திய எறிபந்து கழக பொருளாளருமான பால விநாயகம் தலை மையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பெண்கள், ஆண்களுக்கு என தனித்தனியே போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இறுதி போட்டி ஞாயிறன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் முதல் 4 அணிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. இப்போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.