districts

நடிகர் பாக்யராஜ் வெளியிட்ட வீடியோ ஆதாரமற்றவை என எஸ்பி விளக்கம்

கோவை, பிப்.14- மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்ப டும் மரண சம்பவங்கள் குறித்து நடிகர் பாக்ய ராஜ் வெளியிட்ட வீடியோ, ஆதாரமற்றவை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி  நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் அருகே பவானி  ஆற்றில் குளிக்க வருவோரை ஆற்றில் மூழ்க டித்து கொல்வதாகவும், அவர்களின் உடல் களை மீட்க பணம் பெறுவதாகவும் சமூக  வலைதளங்களில் இயக்குனரும், நடிகரு மான பாக்யராஜ் வீடியோ ஓன்றை பதிவிட்டி ருந்தார். இது சமூக வலைதளங்களில் வைர லானது. இந்நிலையில் இது குறித்து  கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பத்ரி நாராயணன் வெளியிட்ட அறிக்கையில், பவானி ஆற்றில் செயற்கையாக மரணங் கள் ஏற்படுத்தபடுவதாக பரவும் வதந்திகள் ஆதாரமற்றது. இதுவரை பவானி ஆற்று  பகுதியில் இந்த மாதிரியான கொலை சம்ப வங்கள் எதுவும் நடந்ததாக மேட்டுப்பாளை யம் காவல் நிலையத்தில் எந்தவித வழக்குக ளும் பதியப்படவில்லை. மேலும் மேட்டுப்பா ளையம் உட்கோட்டத்தில் உள்ள பவானி ஆறு காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும்  சிறுமுகை ஆகிய மூன்று காவல் நிலைய எல் லைகளில் உள்ள சுமார் 20 கிராமங்கள் வழி யாக செல்கிறது. கடந்த 2022-ம் ஆண்டில், பவானி ஆற் றில் தற்செயலாக மூழ்கி 20 நபர்கள் இறந்துள் ளனர். அடிக்கடி நீரில் மூழ்கி ஏற்படும் உயிரி ழப்பைக் கருத்தில் கொண்டு, கோவை மாவட் டம் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் தலை மையில் 10 பயிற்சி பெற்ற காவலர்கள்  அடங்கிய சிறப்புப் பிரிவு, மேட்டுப்பாளை யம் லைஃப் கார்ட்ஸ் என்ற பெயரில் 2023  ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்ற னர். இந்த பிரிவின் முயற்சி காரணமாக, பவானி ஆற்றில் தற்செயலாக மூழ்கி இறந்த வர்களின் எண்ணிக்கை 2023-ல் 6 ஆக குறைந் துள்ளது. 2022 மற்றும் 2023 ம் ஆண்டுகளில்  பதிவாகிய அனைத்து வழக்குகளிலும், முறையான விசாரணை நடத்தப்பட்டு, அலட் சியம் அல்லது அதீத நம்பிக்கையே இறப்புக் கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேட்டுப்பாளையம் பவானி ஆற் றில் ஏற்படும் மரண சம்பவங்கள் குறித்து பர வும் வதந்திகள் ஆதாரமற்றவை, உண்மை யற்றவை என மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் பத்ரி நாராயணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.