கோவை, பிப்.28- உக்ரைன் - ரஷ்யா போர் காரண மாக இந்தியாவிற்குள் 40 லட்சம் பேல் பஞ்சை உடனடியாக இறக் குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தினர் ஒன் ்றிய அரசிற்கு கோரிக்கை வைத் துள்ளனர். கோவை பந்தய சாலையில் அமைந்துள்ள தென்னிந்திய பஞ் சாலை சங்க அலுவலகத்தில் அச் சங்கத்தின் தலைவர் ரவிசாம் மற் றும் பொதுச்செயலாளர் செல்வ ராஜூ ஆகியோர் செய்தியாளர் களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், பஞ்சு விலை இரண்டு மடங்காக உயர்ந் துள்ளது. இதன் காரணமாக, நடப் பாண்டில் பஞ்சு தட்டுப்பாடு ஏற்ப டும் நிலை உருவாகியுள்ளது. நடப் பாண்டில் 340 முதல் 350 லட்சம் பேல்கள் வரும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், தமிழகத்தில் பெய்த தொடர் மழை காரணமாக இந்த எண்ணிக்கை குறைந்துள் ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் உடனடியாக 11 சதவிகி தமாக உள்ள பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்து, 40 லட்சம் பேல்களை இறக்குமதி செய்து கையிருப்பில் வைக்க வேண்டும். இதேபோல், கோவை, திருப் பூர், ஈரோடு, மதுரை, ராஜபாளை யம் ஆகிய பகுதிகளில் செயல் பட்டு வரும் பஞ்சாலைகளின் நலன்களை கருத்தில் கொண்டு, இஎல்எஸ் எனப்படும் செயற்கை இழை பஞ்சுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். ஒன்றிய அரசு உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர வாய்ப்புள்ளது. ஆகவே, கொரோனா காலத்திற்கு பிறகு சற்றே நிமிர்ந்து வரும் தொழில் துறையினரை பாதுகாக்க அரசு இந்த இறக்குமதி வரியை ஒரு முறை மட்டுமாவது ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் சுமார் இரண்டரை லட்சம் தொழிலாளர் கள், தறி உரிமையாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கடுமை யான பொருளாதார இழப்பை சந்திக்க நேரிடும். இவ்வாறு அவர் கள் தெரிவித்தனர்.