districts

img

அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்க

திருப்பூர், செப்.3 - உடுமலை ஒன்றியம், தின்னப்பட்டி ஊராட்சியில் அடிப் படைப் பிரச்னைகளுக்கு தீர்வு காணக் கோரியும், 100 நாள்  வேலைத் திட்டத்தில் தொடர்ச்சியாக பணி வழங்கக் கோரியும்  சாலையூர் ஊராட்சி முழுவதும் தெருமுனைப் பரப்புரை நடைபெற்றது.  சாலையூர் கிளைச் செயலாளர் மீன்காரர் காளிமுத்து  தலைமை வகித்தார். வாலிபர் சங்க நிர்வாகி சபரி கிரிநாதன் வரவேற்றார். நோக்கங்களை விளக்கி கட்சியின் உடுமலை ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ், கமிட்டி உறுப்பினர்கள் சு.தமிழ்த்தென்றல், கே.மகேஸ்வரி, விதொச கமிட்டி உறுப்பினர் சுப்புலட்சுமி ஆகியோர் பேசினர். சாலையூர், சாலையூர் கிழக்குபகுதி, மேற்குப்  பகுதி உட்பட ஊராட்சி முழுவதும் பரப்புரை நடைபெற்றது.  சாலையூர் ஸ்ரீரங்கன் நன்றி கூறினார்.