districts

img

அரூர் பேருந்து நிலையம் பின்புறம் சிறு நுழைவாயில்

தருமபுரி, டிச.5- புதியதாக கட்டப்பட்டு வரும் அரூர் பேருந்து நிலையத்தின் பின்பு றம் தெற்கு பகுதியில், சிறுநுழை வாயில் ஏற்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக தருமபுரி மாவட்ட வருவாய் அலு வலர் பால்பிரின்ஸிலி ராஜ்குமாரி டம் மனு அளித்தனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் பி. டில்லிபாபு, அரூர் ஒன்றிய செயலா ளர் பி.குமார், மலைவாழ் மக்கள்  சங்க மாவட்டச் செயலாளர் கே.என். மல்லையன், நிர்வாகி எஸ்.கே. கோவிந்தன் ஆகியோர் அளித்த  மனுவில் தெரிவித்திருப்பதாவது, அரூர் தேர்வுநிலைப்பேரூராட்சி யில் புதிதாக 3.62 கோடி ரூபாயில் நவீன பேருந்து நிலையம் கட்டப் பட்டு வருகிறது. இக்கட்டுமானத் தில் நுழையவும், வெளியேறவும், மேற்கில் மட்டுமே வழிவிடப்பட் டுள்ளது. அன்றாடம் நூற்றுக்கணக் கான பேருந்துகளும், ஆயிரக்க ணக்கான பயணிகளும் புழங்கும் பேருந்து நிலையமாக இது உள் ளது. இந்த பேருந்து வளாகத்திற்கு ஒரே ஒரு வழியை மட்டுமே வைத்து  எஞ்சிய பக்கங்கள் அனைத்தையும் மூடுண்ட வகையில் கட்டுவது பல் வேறு இன்னல்களுக்கு வழிவகுக் கும். ஏதேனும், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், மக்கள் உடனடியாக வெளியேறி தப்புவதற்கு வழியின்றி மாட்டிக்கொள்ளும் நிலை உருவா கும். எனவே, மக்கள் நலனைக்  கருத்தில்கொண்டு பக்கவாட்டிலும் பின்புறமும் அவசரவழிகள் அமைக் கப்பட வேண்டும். மாவட்டத்தின் மலைப்பகுதி ஊர்களான சேலூர் அம்மாபாளை யம், சிட்லிங், கோட்டப்பட்டி, நரிப் பள்ளி, புனிதத்தலமான தீர்த்த மலை, அரூர் நகரின் ஒருங்கிணைந் தப் பகுதியான அம்பேத்கர் நகர் மற்றும் ஆற்றோர வீதி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஊர்களின் மக் கள் எளிதாக வந்துபோக ஏதுவாக பழைய பேருந்து நிலையத்தின் தெற்குப்புறத்தில் நுழைவுவழி விடப் பட்டிருந்தது. ஆனால், தற்போது அந்த வழியும் அடைக்கப்பட்டு கடைகள் கட்டப்படுவதற்கான ஏற் பாடு மேற்கொள்ளப்படுகிறது. இவ் விசயம் தெரியவந்ததும் பொதுமக் கள் நலனில் அக்கறையுள்ள மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் அரூர் கேட்டாட் சியர், வட்டாட்சியர், தேர்வுநிலைப் பேரூராட்சி செயல் அலுவலர் மற் றும் தேர்வுநிலைப் பேரூராட்சி மன் றத்தலைவர் ஆகியோரிடம் ஆட்சே பணை மனு அளிக்கப்பட்டது. அமைதிக்குழுவினைக் கூட்டி  தீர்வு காணப்படும் என்று கோட்டாட் சியர் எங்கள் கட்சிக்கு எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தார்.

ஆனால், உறுதிமொழிக்கு மாறாக  கட்டுமானப்பணிகளைத் தொடர்வ தற்கான முயற்சிகள் மேற்கொள் ளப்படுகிறது. இதனையடுத்து, டிச.2 அன்று பொதுமக்கள் சார்பில் கட்டுமான இடத்தில் எதிர்ப்பு தெரி விக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது வரை இப்பிரச்னைக்கு தீர்வு காணப் படவில்லை.  மேலும், இதுபற்றி தனிப்பட்ட முறையில் அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், குறிப்பிட்ட ஒரு  சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பேருந்து நிலையத்தில் செல்போன் உள் ளிட்ட பொருட்களைத் திருடிக் கொண்டு ஓடிவிடுவதாகவும் அதைத் தடுக்கவே அவசரவழி விடவேண்டிய தில்லை என்று முடிவெடுத்திருப்ப தாகவும், தெரிவிக்கின்றனர். சமூ கத்தின் பல்வேறு மட்டங்களில் பல  உயர் பொறுப்புகளை வகிக்கும்  ஆளுமைகள் நிறைந்த அப்பகு தியை திருட்டுக்குற்றவாளிகள் நிறைந்த பகுதி என்று குற்றம்சாட்டு வது சாதியரீதியான பாகுபாட்டை  வெளிப்படுத்தி இழிவுபடுத்துவதா கும். இதனால் சமூகத்தில் தேவை யற்ற பதற்றமும் பிரிவினையும் உரு வாகும் ஆபத்துள்ளது. எனவே, பொதுமக்கள் நல னைக் கருத்தில் கொண்டு ஏற்க னவே பழைய பேருந்து நிலையத் தில் இருந்தவாறு தெற்குப்பகுதி யிலும், பிற பகுதிகளிலும் அவசர வழி விடுவதற்கு உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என தெரிவித் துள்ளனர்.