districts

img

பிஎஸ்என்எல் சேவையை மேம்படுத்தக்கோரி முழக்கம்

தருமபுரி, ஜூன் 25- பிஎஸ்என்எல் சேவையை மேம் படுத்த வேண்டும், என வலியுறுத்தி  பிஎஸ்என்எல் ஊழியர், ஓய்வூதியர் கள், ஒப்பந்த ஊழியர் சங்கத்தினர் புத னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தமிழ்நாட்டில் பிஎஸ்என்எல், மொபைல் சேவைகளில் தரம் மிக வும் மோசமான நிலைமையில் உள் ளது. சில நாட்களுக்கு முன்பு வரை  மிகச்சிறப்பாக இருந்த குரல் அழைப்புகள் கூட, இன்று வாடிக்கை யாளர்களை சிரமப்படுத்த வைக்கி றது. ஒரு அழைப்பிற்கு பலமுறை டயல் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. அழைப்புகள் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது. குறைந்த அளவு 4ஜி சேவை சேவை உள் ளது. 3ஜி சேவை ஒழுங்காக கிடைப்ப தில்லை. இதனை சரி செய்ய வேண்டு மென பலமுறை வலியுறுத்தியும், எந்த பதிலும் தரப்படவில்லை. எனவே, பிஎஸ்என்எல் சேவையை மேம்படுத்த வேண்டும், என வலியு றுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம்,  ஒப்பந்த ஊழியர் சங்கம், ஓய்வூதி யர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி பிஎஸ்என்எல் அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, ஊழியர் சங்க கிளைச் செய லாளர் முருகன் தலைமை வகித்தார். மாநில உதவிச்செயலாளர் உமா ராணி, மாவட்டச் செயலாளர் பி. கிருஷ்ணன், ஓய்வூதியர் சங்க மாவட் டச் செயலாளர் டி.பாஸ்கரன், ஒப் பந்த ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.ஜோதி உட்பட பலர் கலந்து  கொண்டனர். கோவை கோவை பிஜிஎம் அலுவலகம்  முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.குடியரசு தலைமை ஏற் றார். இதில், பிஎஸ்என்எல்யூ மாநி லச் செயலாளர் மகேஸ்வரன், மாநில  துணைத்தலைவர் ஏ.பாபு ராதா கிருஷ்ணன், பிஎஸ்என்எல் டாட்  ஓய்வூதியர் சங்க மாநில அமைப்பா ளர் நாச்சிமுத்து, பிஎஸ்என்எல் ஒப் பந்த ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் அப்துல் முத்தலிப் உள்ளிட்ட  திரளானோர் போராட்டத்தில் பங் கேற்றனர். இதேபோன்று பொள் ளாச்சியிலும் இக்கூட்டமைப்பு சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.