ரயில்வே ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
சேலம், மே 26- சேலம் ரயில்வே கோட்டத்தில் திறன் மேம்பட்டு பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது. இந்த தொடக்க விழாவை, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீநிவாஸ் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ரயில்வே கோட்ட கூடுதல் மேலா ளர் சிவலிங்கம் மற்றும் ரயில்வே அதிகாரிகள் உடன் இருந்த னர். இதில், டிக்கெட் பரிசோதகர்கள், பயணச்சீட்டு வழங்குப வர்கள், ரயில் நிலைய அதிகாரிகள், பார்சல் அலுவலகத் தில் பணிபுரியும் அலுவலர்கள், கூட்ஷெட்டில் பணிபுரியும் ரயில்வே தொழிலாளர்களுக்கு முதற்கட்டமாக பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் ரயில் பயணிகளுக்கு சேவைகளை எப்படி சிறப்பாக செய்வது, ரயில் பயணிகளின் குறைகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது, பயணிகளுடன் கனிவாக நடந்து கொள்வதைப் பற்றி, பயணிகளின் தேவைகளை நன் றாக அறிந்து அவர்களுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும். கனிவான முறையில் பயணிகளிடம் எப்படி நடந்து கொள் வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
874 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து
கோவை, மே 26- போக்குவரத்து விதியை மீறி, வாகனம் ஓட்டிய 874 பேரின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ள னர். கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதியில் விபத்து ஏற்படுவதை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவ டிக்கை எடுத்து வருகிறார்கள். இதன் ஒருபகுதியாக வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள், அதிவேகமாக செல்பவர் கள், சிக்னலை மதிக்காமல் செல்பவர்கள், தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் என்று போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகிறார்கள். மேலும், அடிக்கடி போக்குவரத்து விதிகளை மீறுபவர் களின் ஓட்டுநர் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப் பட்டு வருகிறது. தற்காலிக ரத்து நடவடிக்கையின் படி கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து ஏப் ரல் மாதம் இறுதி வரை 4 மாதத்தில் போக்குவரத்து விதி களை மீறிய வாகன ஓட்டிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் களின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு காவல்துறையி னர் பரிந்துரை செய்தனர். அதில் பலரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. இது குறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், கோவை மாவட் டத்தில் கடந்த 4 மாதத்தில் மட்டும் மதுபோதையில் வாகனம் ஓட்டுவது உள்பட போக்குவரத்து விதிகளை மீறிய 874 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதில், விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்திய 217 பேர், மது போதையில் வாகனங்களை ஓட்டிய 151 பேர் அடங்கு வர். அதிகபட்சமாக பிப்ரவரி மாதம் விபத்து ஏற்படுத்திய 39 பேர், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 123 பேரின் ஓட்டுநர் உரிமமும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. ஒட்டுநர் உரிமம் ரத்து நடவடிக்கை 6 மாதங்களுக்கு அம லில் இருக்கும். அதன் பிறகு அந்த நபர் தனது ஓட்டுநர் உரி மத்தை சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவல கத்துக்கு சென்று புதுப்பித்துக்கொள்ள வேண்டும். ஒரு முறை ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நபர் மீண்டும் ஓட்டுநர் உரிமம் ரத்தானால் அவருக்கு ஓட்டுநர் உரிமம் வழங் கப்படாது, என்றனர்.
வெள்ளியங்கிரி மலையில் வழக்கறிஞர் மரணம்
கோவை, மே 26- கோவை பூண்டி பகுதி யில் வெள்ளிங்கிரி மலை திருக்கோவிலில் அமைந் துள்ளது. இந்த மலைக் கோவிலில் தரிசனம் செய்ய புதனன்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரான இளஞ்செழியன் (55) என்ப வர் வந்துள்ளார். இவர் மலையேறிய நிலையில், திடீரென மூச்சு திணறல் ஏற் பட்டு மயங்கி விழுந்து பரி தாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆலாந்துறை காவல்துறை யினர் சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் உதவியுடன் அவரது உடலை மீட்டனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பல்லடம் அரசு கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப எஸ்எப்ஐ கோரிக்கை
திருப்பூர், மே 26 - திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு கல்லூரியில் பேராசிரி யர் காலி பணியிடங்களை நிரப்பும்படி இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் கிராமப்புற மாண வர்கள் நலனை கருத்தில் கொண்டு முதுநிலை பாடப் பிரிவு களை துவங்கிட வேண்டும் என்றும் வியாழனன்று நடை பெற்ற இந்திய மாணவர் சங்க பல்லடம் கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த மாநாட்டுக்கு சங்கத்தின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் சந்துரு தலைமை ஏற்றார். மாநாட்டை துவக்கி வைத்து மாவட்ட செயலாளர் சம்சீர் அகமது உரை யாற்றினார். இம்மாநாட்டில் கிளை தலைவராக மோகன், செயலாளராக சந்துரு, துணை தலைவராக ஸ்ரீதேவி, துணை செயலாளராக சங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து மாவட்ட தலைவர் பிரவீன்குமார் நிறைவுரை ஆற்றினார்.
சிறுவனுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஒருவர் கைது
தாராபுரம், மே 26- தாராபுரத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அரசு பேருந்து ஓட்டுநரை காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள சீதா நகரை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (58). இவர் அரசு போக்குவ ரத்து கழக தாராபுரம் பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஆரோக்கியதாஸ் அதேபகு தியை சேர்ந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகு றித்து அந்த சிறுவன் பெற்றோருக்கு தெரிவித்ததையடுத்து, சிறுவனின் அவர்கள் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கவிதா (பொறுப்பு) ஆரோக்கியதாசிடம் விசா ரணை மேற்கொண்டார். இதன்பின் ஆரோக்கியதாஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
தாராபுரம், மே 26- தாராபுரம் அருகே கிணற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த கோதைமங்க லம் பகுதியை சேர்ந்தவர் ஆதித்யா முருகநாதன் (19). கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முத லாம் ஆண்டு படித்து வருகிறார் இவர், தனது சகோதரர் பிரித் வியுடன் தாராபுரம் அருகே உள்ள கொங்கூர் பகுதியில் உற வினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில், ஆதித்யா முருகநாதன், பிரித்வி, அவர்களது நண்பர் கவுதம் ஆகிய 3 பேரும் அதே பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆதித்யா முருகநாதன் நீரில் மூழ்கிவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் உதவி கேட்டு சத்தம் போட்டனர். அப்போது அருகில் இருந்த வர்கள் கிணற்றில் குதித்து ஆதித்யா முருகநாதனை மீட்க முயற்சி செய்தும் பலனில்லாததால், உடனடியாக இச்சம்ப வம் குறித்து தாராபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீய ணைப்பு வீரர்கள் கிணற்றி இறங்கி தேடி ஆதித்ய முருகநா தனை சடலமாக மீட்டனர். இதன்பின், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அலங்கியம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம்
அவிநாசி, மே 26- அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற் பனை சங்கத்தில் புதனன்று நடைபெற்ற பருத்தி ஏலத்திற்கு 941 மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் ஆர்சிஎச் ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றிற்கு ரூ.11 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரத்து 17 வரையிலும், மட்டரக பருத்தி குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 500 முதல் ரூ.6 ஆயிரத்து 500 வரையிலும் ஏலம் போனது. இதன் மொத்த மதிப்பு ரூ.33.46 லட்சமாகும் என சங்க மேலாண்மை இயக்குனர் சரவணகு மார் தெரிவித்துள்ளார்.
அவினாசி -அத்திக்கடவு திட்டத்தின் 1.5 டன் இரும்பு கொள்ளை - 5 பேர் கைது
கோவை, மே 26- கோவை மாவட்டம், அன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் அவினாசி-அத்திக்கடவு திட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதி யாக அன்னூரை அடுத்துள்ள குன்னத்தூராம்பாளையம் பகுதியில் 6 ஆவது நீரேற்று நிலையம் அமைக்கும் பணி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியை சேர்ந்த சிபியரசன் (29) என்பவரது பொறுப்பில் நடைபெற்று வருகிறது. இதற்கி டையே, சிபியரசன் கடந்த புதன்கிழமை தனது பொறுப்பில் உள்ள அவினாசி-அத்திக்கடவு திட்டப்பணிகளுக்காக வைக் கப்பட்டிருந்த சுமார் 1.5 டன் இரும்பு பொருட்கள் திருடு போயுள்ளதாக அன்னூர் காவல் நிலையத்தில் புகாரளித் தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இரும்பு பொருட்களை திருடியவர்களை தேடி வந்தனர். இந்நிலையில், தென்னம்பாளையம் சாலையில் போலீ சார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த 5 பேரை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணை யில், அவர்கள் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த வெங்கட கிருஷ்ணன் (25), பிரசாந்த் (24), நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கெளதம் (24), சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த நவீன் (25), பூபதி (25) என்பதும், குன்னத்தூராம் பாளையம் அவினாசி-அத்திக் கடவு திட்ட இரும்பு பொருட்களை திருடியவர்கள் என்ப தும் தெரியவந்தது. இதில் பிரசாந்த் என்பவர் அவினாசி-அத்திக்கடவு திட்டத் தின் குன்னத்தூராம்பாளையம் நீரேற்று நிலையத்தின் காவ லாளியாக பணிபுரிந்ததும், மற்றவர் அவரது நண்பர்கள் என் பதும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 1.5 டன் இரும்பு பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய தாக லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு
நாமக்கல், மே25- தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பள்ளிபாளையம் நகர கிளை அமைப்பு கூட்டம் நடை பெற்றது. இதில், சங்க மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர்.முரு கேசன் பங்கேற்று உரையாற்றினர். இதையடுத்து கிளைத் தலைவராக எம்.சரவணன், செயலாளராக பி.முருகேசன், பொருளாளராக கே.அருண்குமார் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.
முறைகேடாக குடிநீர் இணைப்பு கையும் களவுமாக பிடித்த சிபிஎம் கவுன்சிலர்கள்
அவிநாசி, மே 26- திருமுருகன்பூண்டி நகராட்சியில் அடுக் குமாடி குடியிருப்புக்கு முறைகேடான குடி நீர் இணைப்பு வழங்கப்படுவதை மார்க் சிஸ்ட் கட்சியின் நகரமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தினர். திருப்பூர் மாவட்டம், அவினாசி ஒன்றி யம், திருமுருகன்பூண்டி நகராட்சி 22 ஆவது வார்டு ரிங் ரோடு பகுதியில் நூற்றுக்கும் மேற் பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு நகராட்சி ஊழி யர் முருகேசன் என்பவர் முறைகேடான வகையில் குடிநீர் குழாய் பதித்து இணைப்பு கொடுக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். இதனையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரமன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணி யம், பார்வதி சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று உடனடியாக அப்பணி களை தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து நகர்மன்ற ஆணை யருக்கு தகவல் தெரிவித்து வரவழைத் தனர். இதன்பின் நகர மன்ற ஆணையர் ஆய்வு மேற்கொண்டபோது முறைகேடாக குடிநீர் இணைப்பு தரப்பட்டது உறுதி செய் யப்பட்டது. இதையடுத்து சம்மந்தப்பட்ட நக ராட்சி ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் நகரமன்ற உறுப்பினர் கள் சுப்பிரமணியம், பார்வதி சிவக்குமார் வலியுறுத்தினர். அப்போது, இது சம்பந்த மாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற ஆணையர் உறுதியளித்தார்.
கல்லூரி மாணவர் போக்சோவில் கைது
கோவை, மே 26- 16 வயது மாணவியை திருமண ஆசை காட்டி கடத் திச் சென்ற நபரை போலீசார் போக்சோவில் கைது செய்த னர். கோவையை சேர்ந்த 16 வயது மாணவி, தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந் தார். இந்த நிலையில், கல் லூரி சென்று வீடு திரும்பிய மாணவி திடீரென மாயமா னர். இதனால், அதிர்ச்சி யடைந்த பெற்றோர் அக் கம், பக்கத்தில் விசாரித்துள் ளனர். இதில், அதே கல்லூரி யில் படிக்கும் கவியரசன் என்ற மாணவன் மாணவி யை கடத்திச் சென்றதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்த னர். இப்புகாரையடுத்து போலீசாரின் தேடுதல் வேட் டையில் மாணவியை மீட்ட னர். விசாரணையில் திரு மண ஆசைக்காட்டி மாண வியை கவியரசன் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாணவியை கடத்திச் சென்ற கவியரசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்து சிறை யில் அடைத்தனர்.