மாணவர் சங்கம் வலியுறுத்தல் நாமக்கல், ஆக.16- நாமக்கல் நகரில் திரைப்படக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் ஒன்றிய 5 ஆவது மாநாடு, உழவர் சந்தை அருகே உள்ள கவின் கிஷோர் திருமண மண்டபத்தில் புதனன்று, சங்கத்தின் மாவட் டக்குழு உறுப்பினர் நவீன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, நாமக்கல் பிர தான சாலையில் இருந்து பேரணியாக சென்ற மாணவர்கள் மாநாட்டு அரங்கத்திற்கு வந்தடைந்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கார்த்திக் மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தார். மாவட்டத் தலைவர் தங்கராஜ் துவக்க உரையாற்றினார். இம்மாநாட்டில், நாமக்கல் நகரில் அரசு பொறியியல் கல்லூரி, சித்தா மருத்துவக்கல்லூரி, திரைப்படக் கல் லூரி அமைக்க வேண்டும். மேலும், கல்லூரி களில் விளையாட்டு மைதானம் அமைத்து, மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங் கத்தின் மாநிலச் செயலாளர் கோ.அரவிந்த சாமி சிறப்புரையாற்றினார். இதைத்தொ டர்ந்து சங்கத்தின் நாமக்கல் ஒன்றியத் தலை வராக நவீன், செயலாளராக தனுஷ் மற்றும் துணைத்தலைவர்கள், துணைச்செயலாளர் கள் உட்பட 21 பேர் ஒன்றியக்குழு உறுப்பினர் களாக தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டச் செயலாளர் சரவணன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். இதில் ஆரம்பப்பள்ளி ஆசி ரியர் சங்க மாவட்டச் செயலாளர் கலைச்செல் வன், விவசாய சங்க முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.ரங்கசாமி, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.கன்னிகா, மாவட்ட நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், யாழினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.