districts

img

வயநாடு மக்களுக்கு நாமக்கல்லில் இருந்து முட்டைகள் அனுப்பி வைப்பு

நாமக்கல், ஆக.13- நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக் காக, காங்கிரஸ் கட்சி சார்பில் நாமக்கலில் இருந்து ரூ.2  லட்சம் மதிப்பிலான முட்டைகள் அனுப்பி வைக்கப் பட்டன. கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அந்த மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில்,  நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்பி லான முட்டைகள் வயநாட்டிற்கு செவ்வாயன்று அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பி.வி.செந் தில் தலைமை வகித்தார். நாமக்கல் திமுக மாவட்டச் செயலாளர் கே.ஆர்.என்.ராஜஸ்குமார் எம்.பி. வாக னத்தை கொடியசைத்து அனுப்பி வைத்தார். இம் முட்டைகளை புதனன்று (இன்று) வயநாடு சட்டமன்ற உறுப்பினர் சித்திக், ராகுல்காந்தி எம்.பி.யின் உதவி யாளர் சரண் இருவரும் பெற்று முகாம்களில் தங்கியுள்ள  பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்க உள்ளதாக பி.வி.செந்தில் கூறினார்.