திருப்பூர், ஏப்.6- திருப்பூரில், வைக்கம் 100 கருத்தரங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலை ஞர்கள் சங்கம் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் நடைபெற்றது. தீண்டாமைக்கு எதிரான வரலாற்று சிறப்பு மிக்க வைக்கம் சத்தியாகிரகம் போராட்டம் குறித்து மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகை யில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் வியாழனன்று வைக்கம் 100 கருத்தரங்கம் நடைபெற்றது. தமுஎகச சங்க மாவட்டச் செயலாளர் ஆ.மணியன் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங் கத்தில், திருப்பூர் வடக்கு செயலாளர் த.காளி தாஸ் வரவேற்புரையாற்றினார். பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களின் ஆலய நுழைவு போராட்ட வர லாறு குறித்து தமுஎகச மாநிலத் துணைத் தலைவர் நா.முத்துநிலவன் சிறப்புரையாற்றி னார். தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார். இதைத்தொடர்ந்து, சம்பத்குமார் எழுதிய பறவையின் சிறகு ஒன்றை பரிசளிக்கும் காற்று என்ற கவிதை நூலை நாவலாசிரியர் சம்சுதீன் ஹீரா அறிமுகம் செய்து வைத்து பேசினார். மணிகண்டபிரபு எழுதிய ஒன் டைம் படிங்க புத்தகத்தை எழுத்தாளர் திருப் பூர் சாரதி அறிமுகம் செய்து வைத்து பேசி னார். முடிவில் பிஎஸ்என்எல் கிளைச் செயலா ளர் குமரவேல் நன்றி கூறினார்.