districts

img

விற்பனையகம் தொடங்கிய திருநங்கைகள்

திருசெங்கோடு, மே 29-   சுயமரியாதையோடு வாழ்வதற்கு சுயதொழில் மூலம்  தயாரிக்கப்படும் பொருள்களை விற்பதற்கு விற்பனைய கத்தை திருநங்கைகள் துவங்கியுள்ளனர். திருநங்கைகளால் தயாரிக்கப்படும் சோப் ஆயில், ஃபினா யில், டிஸ்வாஷ் தயாரிக்கின்றனர். இதனை விற்பனை செய்யும் வகையில் விற்பனையகம் துவக்க முயற்சி மேற் கொண்டு வந்தனர். இதனையறிந்த திருநங்கைகள் திருப் பணி இயக்கம், திருச்செங்கோடு சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயம் சார்பில் திருநங்கைகள் ஞாயிற்றுக்கிழமை மற்றும்  சிறப்பு விழா நாட்களில் தேவலாயம் முன்பு தற்காலிக அங்காடி  அமைத்து விற்பனை செய்ய அனுமதி கொடுத்திருந்தனர். அதன்படி,  சங்ககிரி ரோடு சிஎஸ்ஐ கிறிஸ்துநாதர் ஆலயம்  முன்பு அமைக்கப்பட்டிருந்த விற்பனை நிலையத்தை ஆலய  நிர்வாக கமிட்டி செயலாளர் பீட்டர் செல்வராஜ் ரிப்பன்  வெட்டி தொடங்கி வைத்தார். திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு குத்து விளக்கேற்றி விற்ப னையை தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் தேவாலய பாதிரியார் ஜஸ்டின், திருநங்கை கள் நலஅமைப்பு நிர்வாகி அருணா நாயக் உள்ளிட்ட  திரளானோர் கலந்து கொண்டனர்.