districts

img

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

நாமக்கல், மார்ச் 25- திருச்செங்கோடு நகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, நகராட்சி அதிகாரிகள் பறி முதல் செய்து கடைகளுக்கு அபராதம் விதித்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சி பகுதி யில் உள்ள மளிகை கடை, காய்கறி கடை உட்பட 10க்கும் மேற்பட்ட கடைகளில் நகராட்சி அதிகாரிகள் சோதனை மேற் கொண்டனர். அப்போது, கடைகளில் விற்பனை செய்வதற் காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 கிலோ தடை செய்யப்பட் டுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.2 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர். முன்னதாக, இந்த ஆய்வில், துப்புரவு அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.