தருமபுரி, மார்ச் 11- தருமபுரி அருகே குடிசை வீட் டில் பெட்டி, பெட்டியாக போதை ஊசியை பதுக்கி வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்த னர். தருமபுரி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர் களை குறிவைத்து போதை ஊசி மற் றும் குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத னால் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் கலைச்செல்வன் உத்தரவின் பேரில் போலீசார் மாவட்டம் முழுவ தும் அதிரடி சோதனை நடத்தி குட்கா, கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், போதை ஊசி கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ள தாக தருமபுரி மாவட்ட மருத்துவத் துறை அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து தரும புரி மருத்துவத்துறை சரக மருந்தக ஆய்வாளர் சந்திரா மேரி தலைமை யிலான அதிகாரிகள் போலீஸ் பாது காப்புடன் சோதனை நடத்தினர். இதில் தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி அருகே மிட்டாதின்ன ஹள்ளி மயில்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த வஜ்ரவேல் (47) என்பவர் போதை ஊசியை இளைஞர்க ளுக்கு போட்டு வருவதாக மருத்து வத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து வஜ்ர வேலை பிடித்து விசாரணை நடத் தியபோது, தருமபுரியில் உள்ள மெடிக்கல் ஸ்டோர் ஒன்றில் போதை ஊசிகளை வாங்கி வருவதாக தெரி வித்தார். இதனையடுத்து மெடிக்கல் ஸ்டோரில் இருந்த சோமசுந்தரம் (51) என்பவரிடம் போலீசார் விசா ரணை நடத்தினர்.
இதில் அவர் பெங் களூருவில் இருந்து காமராஜ் என் பவர் தனக்கு போதை ஊசிகளை வாங்கி தருவதாகவும், இதில் சாமி செட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசனுக்கும் (46) தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இத னைத்தொடர்ந்து நடத்திய விசார ணையில் முருகேசன், ஏலகிரி கிரா மத்தில் உள்ள நண்பர் ஒருவரது குடிசை வீட்டில் போதை ஊசிகளை பெட்டி பெட்டியாக பதுக்கி வைத்தி ருப்பதை மருந்து கட்டுப்பாட்டு அதி காரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். போதை ஊசி தொடர் பாக, வஜ்ரவேல், காமராஜ், முருகே சன், சோமசுந்தரம் உள்ளிட்ட 4 பேரையும் அதியமான் கோட்டை போலீசார் கைது செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இதில் கைதான வஜ்ரவேல், முருகேசன் ஆகியோர் இளைஞர்க ளுக்கு போதை ஊசிகளை விற்று, அதை அவர்களுக்கு செலுத்தி வந்த தும் தெரியவந்தது. மேலும், பிடிபட்ட காமராஜ் என்பவர் மருந்து விற் பனையாளராக இருந்து வருகிறார். இவரிடம் இருந்து சோமசுந்தரம் போதை ஊசிகளை வாங்கி, வஜ்ர வேல், முருகேசன் ஆகியோர் ‘சப்ளை’ செய்து வந்ததும் தெரிய வந்தது. உடல் வலி நிவாரணிக்கு மருத்துவர்களால் பரிந்துரைத்த பிறகே பயன்படுத்தக்கூடிய குறிப் பிட்ட மருந்தினை போதைக்காக பயன்படுத்தி வந்துள்ளதாக மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.