சேலம், ஜூலை 3- 18 வருடங்களாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என வலி யுறுத்தி, சேலத்திலுள்ள நகராட்சி களின் நிர்வாக மண்டல இயக்கு நர் அலுவலகத்தை தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட்டனர் சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், நரசிங்கபுரம் நகராட்சி யில் 70க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படை யில், கடந்த 18 வருடங்களாக பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் தூய்மைப் பணியா ளர்களுக்கு முறையாக ஊதியம், உபகரணங்கள் வழங்காமல் நக ராட்சி நிர்வாகம் செயல்பட்டு வரு கிறது. இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள் பலமுறை அதிகாரி களிடம் தெரிவித்தும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த தூய் மைப் பணியாளர்கள் புதனன்று சேலம், சத்திரம் பகுதியில் அமைந் துள்ள நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் அலுவல கத்தை முற்றுகையிட்டனர். அப்போது, மாதந்தோறும் முறையான ஊதியம் வழங்க வேண் டும். குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு ரூ.638 கணக்கிட்டு வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள், சீருடை வழங்க வேண்டும். நிரந் தர பணியிடங்களை ரத்து செய்யும் விதமாக தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்:10, மாநகராட்சி அரசாணை :152யை ரத்து செய்ய வேண்டும். இரண்டு ஆண்டுகளில் 480 நாட் கள் பணிபுரிந்த, சுமார் 18 ஆண்டு காலமாக பணி செய்து வரும் தூய்மைப் பணியாளர் களை பணி நிரந்தரம் செய்ய வேண் டும். தமிழ்நாடு அரசு அறிவித்த கொரோனா கால முன் கள தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத் தொகை ரூ.15 ஆயிரத்தை உடனடி யாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் அப்பகு தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.