நாமக்கல், ஏப்.29- நாட்களை குறைத்து ஊதியத்தை குறைத் துக்கொடுப்பதாக குற்றம்சாட்டி, பரமத்தி வேலூர், பொத்தனூர் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட் டனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகாவில் பொத்தனூர் பேரூராட்சி அமைந் துள்ளது. பேரூராட்சி தலைவராக ஆர். கருணாநிதி, செயல் அலுவலராக ரவிசங்கர் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இந்த பேரூராட்சியில் பணியாற்றி வருகின்ற தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை குறைத்து வழங்கி யதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முன்பு சனியன்று தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தொழிலாளர்கள் கூறுகை யில், இந்த பேரூராட்சியில் ஒப்பந்த தொழி லாளர்களாக தொகுப்பு ஊதியத்தின் அடிப் படையில் 44 ஆண்கள், பெண்கள் என தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வரு கின்றோம். நாங்கள் தொடர்ந்து தினமும் 10 மணி நேரம் நாங்கள் வேலை செய்து வரு கிறோம். எங்களுக்கு தினமும் ரூ.440 சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் 31 நாட்கள் நாங்கள் வேலை செய்கிறோம். ஆனால், மாதத்தில் 27 நாட்கள் கணக்கிட்டு சம்ப ளத்தை வழங்குகின்றனர். ஞாயிற்றுக் கிழமைகளிலும் வேலை செய்கிறோம் எங்க ளுக்கு விடுமுறை கிடையாது. எங்களை வைத்து அனைத்து வேலைகளையும் வாங்கு கின்றனர். ஆனால், சம்பள கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. மேலும், வருடா வருடம் 1000 ரூபாய் சம்பள உயர்வு வழங்க வேண்டும், அதையும் வழங்குவதில்லை. எங்களுக்கு கொடுக்கின்ற சம்பளத்தில் ரூ.2000 பிடித்தம் செய்து வழங்குவதால், எங்கள் வாழ்க்கையை நாங்கள் எப்படி நடத்துவது!? பிடித்தம் செய்யப்பட்டுள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் இல்லை என்றால் அதுவரை எங்களது போராட்டம் தொடரும். மாவட்ட ஆட்சி யரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம் என்றனர். தூய்மைப்பணியாளர்களின் போராட் டத்தையடுத்து, பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதி மற்றும் செயல் அலுவலர் ரவிசங்கர் மற்றும் அரசு துறை அதிகாரிகள், தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.