சேலம், மார்ச் 6- சேலம் மாவட்ட தடகள சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக் கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் சனியன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட தடகள சங்கம் சார் பில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் சேலம் காந்தி மைதானத்தில் சனியன்று நடை பெற்றது. இதில், மாநகர காவல் துணை ஆணையாளர் மாடசாமி கலந்து கொண்டு தடகள போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டி களில் மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி கள் கலந்து கொண்டனர். இதன்பின், 100, 200, 400, 500, 800, 3000 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற் றன. இதில், 12,14,16, 18 மற்றும் 20 வயதுக்கு கீழ் என 5 பிரிவுகளாக ஆண் கள், பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன. நிறைவாக, ஒவ்வொரு விளை யாட்டு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த வீரர், வீராங் கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர் களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடு களை மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் மோகன் குமாரமங்கலம், செயலாளர் முத்துக்குமார், பொருளா ளர் ரவி, துணைத் தலைவர்கள் விம லன், செவ்வை அன்புக்கரசு ஆகி யோர் செய்திருந்தனர்.