districts

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

சேலம்: நீதிமன்றம் முன்பு  பெண் படுகொலை

சேலம், மே 22- சேலம் பொன்னம்மாப்பேட்டை புத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (35), ஷேர் ஆட்டோ  ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரின் மனைவி தமிழ் செல்வி (28). இவர்களுக்கு 8 மற்றும் 3 வயதில் இரண்டு மகன் கள் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகி றது. இதனால், தமிழ்செல்வி கணவனை விட்டு பிரிந்து தனது இரு மகன்களுடன் பள்ளிப்பட்டியில் உள்ள தனது பெற்றோ ருடன் வசித்து வந்துள்ளார். மேலும், சேலம் ஏற்காடு சாலை யில் அமைந்துள்ள நீதிமன்றம் எதிரே தமிழ்ச்செல்வி பழக் கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், வியாழனன்று மாலை அங்கு வந்த மூர்த்தி திடீரென தமிழ்ச்செல்வியின் கழுத்து மற்றும் நெஞ் சில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து சென்று மூர்த்தி மடக்கி பிடித் தனர். இதன்பின், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போரா டிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வியை மீட்டு 108 ஆம்புலன்ஸ்  மூலம் சேலம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வி உயிரிழந் தார்.   இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த துணை  மாநகர காவல் ஆணையர் மாடசாமி, அஸ்தம்பட்டி உதவி  ஆணையர் முருகேசன், காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன்  ஆகியோர் மூர்த்தியை கைது செய்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண் டனர். இந்த விசாரணையில் மனைவி தமிழ்செல்வியின் மீது  ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை குத்திக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. நீதிமன்றம் அருகே நடைபெற்ற இக் கொலைச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது.

ரயில் நிலையத்தில் முதியவர் சாவு

கோவை, மே.21- கோவை ரயில் நிலையம் 3 ஆவது பிளாட்பாரத்தில் நடந்து வந்த கொண்டிருந்த 70 வயது மதிக்கத்தக்க முதி யவர் ஒருவர் திடீரென மயங்கி விழந்தார். தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் முதியவரை மீட்டு  கோவை அரசு மருத்துவம னையில் சிகிச்சைக்கு சேர்த் தனர். ஆனால், அங்கு  சிகிச்சை பலனின்றி முதிய வர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, ரயில்வே  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவி மாயம்

கோவை, மே 21- கோவை காரமடையை சேர்ந்தவர் ரங்கநாதன். இவ ரது மகள் சுஜித்ரா (19). இவர் தனியார் கல்லூரியில் முத லாம் ஆண்டு படித்து வரு கிறார். சுஜித்ராவின் தாய் - தந்தை கடந்த சில வருடங்க ளுக்கு முன்பு இறந்து விட்ட னர்.  இதனால், அவர் தனது பாட்டியின் வீட்டில் இருந்து  வந்தார். சம்பவத்தன்று சுஜித்ரா பாட்டியிடம் கல்லூ ரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். பின்னர், வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத் தினர் அவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுக ளில் தேடி பார்த்து கிடைக்கா ததால் காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித் தார். இதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சுஜித்ராவை தேடி வருகின்றனர்.

மதுபோதையில் வாலிபரின் மண்டையை உடைத்த இருவர் கைது

கோவை, மே 21- கோவை சிங்காநல்லூர் திருமலையப் பன் கோவில் வீதியை சேர்ந்தவர் மதன் குமார் (23). இவரது உறவினர் சூலூர் கண் ணம்பாளையம் பகுதியை சேர்ந்த கேசவன்  என்கிற அஜித் (27). இவரது தம்பி சந்தோஷ்  (23). தனியார் நிறுவன மேற்பார்வையாளர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கேசவனின் நண்பர் ஒருவரின் செல்போன் திருட்டு  போனது. இதனை மதன்குமார் திருடிய தாக இருதரப்பினருக்கும் இடையே முன்வி ரோதம் இருந்துள்ளது.  சம்பவத்தன்று மதன் குமார்  கண்ணம்பாளையம் திரு.வி.க நகர் பகுதியில் நின்றிருந்தார். அப்போது மதுபோ தையில் அங்கு  வந்த கேசவன் மற்றும் அவரது தம்பி சந்தோஷ் ஆகிய இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாங்கள் வைத்தி ருந்த மது பாட்டிலால் மதன் குமாரின் மண் டையை உடைத்து, கொலை மிரட்டல்  விடுத்து அங்கிருந்து சென்றனர். இது குறித்து மதன்குமார் சூலூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கேசவன் மற்றும் சந்தோசை பிடித்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழிப்பறியில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது

அவிநாசி, மே 21- சேவூர் அருகே சின்னக்கானூரில், இரும்புக்கடை முதிய வரை தாக்கி வழிப்பறி செய்த வழக்கில் இருவர் கைது செய்யப் பட்ட நிலையில், மேலும் ஒருவரை காவல் துறையினர் வெள்ளியன்று இரவு கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ள போத்தம் பாளையம் பகுதியில் இரும்புக்கடை வைத்து நடத்தி வருபவர் நடராஜ் (70). இவரை கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதியன்று செல்போனில் அழைத்த இரு நபர்கள், தங்களி டம் 800 கிலோ பழைய இரும்பு உள்ளதாகவும், அதற்கான பணத்தை எடுத்துக்கொண்டு சின்னக்கானூர் இரும்பு ஆலை அருகே வருமாறு கூறியுள்ளனர். இதை நம்பிய நட ராஜ், பணத்துடன் சின்னக்கானூருக்கு சென்றுள்ளார். அப் போது அங்கு காத்திருந்த மூன்று நபர்கள், நடராஜை தாக்கி அவரிடம் இருந்த ரூ.28 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து நடராஜ் சேவூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அப்புகாரின்பேரில் காவல் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், நடராஜை தாக்கி பணம் பறித்த வர்கள் சேவூர் குலாலர் வீதியைச் சேர்ந்த கிட்டான் மகன் ரவி (45), தெக்கலூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த லட்சும ணன் மகன் மோகன்ராஜ் (40), நஞ்சப்பன் மகன் கந்தசாமி (50) என்பது தெரியவந்தது. இதையடுத்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஏப்.14 ஆம் தேதியன்று ரவி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், கந்தசாமியை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், வெள்ளியன்று இரவு அவரை சேவூர் போலீசார் கைது செய்தனர்.

ஆக்கிரமிப்பு கடைகளால் பொதுமக்கள் அவதி

உடுமலை, மே 21- உடுமலை உழவர்சந்தை பகுதியில் ஆக்கிரமிப்பு கடைக ளால் சந்தைக்கு வந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவ தியடைந்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை உழவர் சந்தையில் காய்க றிகள் வாங்கிக் செல்வதற்காக உடுமலை நகரம் மற்றும் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தினசரி வந்து செல்கின்றனர். இச்சந்தையின் உட்பகுதியில் வியாபாரம் செய்பவர்களைத் தவிர சாலையிலும் போக்குவரத்துக்கு இடையூறாக கடைகள் போடப்பட்டுள்ளன. சந்தையிலி ருந்து வடக்கு பகுதி வழியாக செல்லும் வழியின் சாலையில் இருபுறமும் தள்ளுவண்டி மற்றும் நான்கு சக்கர வாகனங் களை நிறுத்தி வியாபாரம் செய்வதால், அப்பகுதி வழியாக மருத்துவமனை மற்றும் அலுவலகங்கள் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல் துறையினர் அப்பகுதியில் பார்வையிட்டு கடை வைப்பதற்கு தடை விதித்திருந்தனர். ஆனால், தற்போது காவல் துறையினர் கண்டுகொள் ளாததால் இந்த பகுதியை அடைத்து வியாபாரம் செய்யப் படுகிறது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அந்த பகுதியாக செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக  ரூ.66 லட்சம் பண மோசடி செய்தவர் கைது

திருப்பூர், மே 21-  வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவ தாக, பலரிடம் ரூ.66 லட்சம் பண மோசடி செய்த நபரை திருப்பூர் மாநகர காவல் துறை யினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டத் திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் ச.ஜீவ ராஜ். இவர் திருப்பூர் மாநகர காவல் ஆணை யர் ஏ.ஜி.பாபுவிடம் குறை தீர்ப்பு நாளில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தான் இணையதளத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு சம்பந்தமான விளம்பரத்தை பார் த்து அதிலிருந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, கண்ணன் என்ப வர் பேசினார். அவர் தனக்கு கனடாவில் உள்ள சாக்லேட் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.10 லட் சம் ஆகும் என்று கூறினார். அதற்கு ஜீவ ராஜ் அவ்வளவு பணம் இல்லை என்று மறுத்துள்ளார். ஆனால், கண்ணன் சிறிது சிறிதாக பணம் கொடுத்தால்போதும் என்றும், வேலை வந்ததும் மீதி பணத்தை கொடுங்கள் என ஆசை வார்த்தை கூறி யுள்ளார். இதைநம்பி, பல்வேறு தேதிகளில் ரொக்கமாகவும், வங்கி கணக்கு மூலமாக வும் ரூ.3லட்சத்து 90 ஆயிரத்தை ஜீவ ராஜ் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு பல நாட்களாகியும் வேலை யும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி தராமல் காலம் கடத்தி வந்தால் சந்தேகப்பட்டு கண்ணன் என்பவரை பற்றி விசாரித்திருக்கிறார். இதில், கண்ணன் இதேபோல் பலரை ஏமாற்றியது தெரிய வந்தாகவும், மேற்படி நபரை கண்டுபிடித்து பணத்தை மீட்டு தருமாறு ஜீவராஜ் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் கண்ணன் மீது  வழக்குப்பதிவு  செய்யப்பட்டது. இப்பு காரை விசாரித்து நடவடிக்கை எடுக்க காவல் ஆய்வாளர் எம்.முனியம்மாள் தலை மையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்க ளின் ஆவணங்கள் மற்றும் வங்கி பரி வர்த்தனைகள் ஆகியவற்றிலிருந்தும் கண்ணன் பல்வேறு மாவட்டத்தினை சேர்ந்த பல நபர்களிடம் பண மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து திருப்பூர் மாவட்டம், நல் லூர் பகுதியில் தலைமறைவாக இருந்து வந்த ஆர்.கண்ணனை (52)வெள்ளியன்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து கார் ஒன் றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் நான்காவது குற்றவியில் நீதித்துறை நடுவர் முன்னிலை யில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற உத்தரவுப்படி கண்ணன் காவலில் அடைக்கப்பட்டார். வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்து பணம் பறிக்கும் நபர் களை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண் டாம் என்றும், இதுபோன்ற குற்ற நடவடிக் கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் துறை நடவடிக்கை தொடரும் என்றும் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு கூறி யுள்ளார்.