திருப்பூர், நவ.3- பல்லடம் அருகே கரைப்புதூர் நடுநிலைப் பள்ளிக் கட்டி டம் இடிபாடுகளுடன் காணப்படுவதால் மாணவர்கள் அச்சத் துடன் பள்ளிக்கு சென்று வருவதாக பெற்றோர்கள் கவ லையடைந்துள்ளனர். பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்ற னர். இந்த பள்ளி கடந்த 2005 ஆம் ஆண்டு ரூ.4.50 லட்சம் திட்ட நிதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் துவங்கப் பட்டது. இதையடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. தற் போது தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி என இரு பிரிவுகளில் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. தற்போது வகுப்பறை பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிபேர் இருக்கையிலும் மீதி பேர் தரையில் அமர்ந்தும் படித்து வருகின்றனர்.பள்ளி கட்டிடத்தின் முன்புறத்தில் ஒரு கட்டிடத் தின் முகப்பு இடிபாடுகளுடன் காணப்படுவதால் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு சென்று வருகின்றனர் என பெற்றோர் கள் கவலையுடன் தெரிவித்தனர். மேலும் சத்துணவு திட்டத்தில் வழங்கப்படும் அரிசி தர மற்றதாக உள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை, எனவே மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையும் உடனடி நடவடிக்கை எடுத்து பள்ளி கட்டிடத்தை சீரமைப் பதுடன்,சத்துணவு திட்டத்திற்கு தரமான அரிசி வழங்க வேண் டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.