districts

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தை கோவையில் அனுமதிக்கக்கூடாது

கோவை, நவ. 2 - ஆர்எஸ்எஸ் நடத்தும் ஊர்வலம் கோவை அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் எந்த விதத்திலும் உதவியாக இருக்காது எனவே காவல் துறை அனுமதி அளிக்கக் கூடாது என இடதுசாரி இயக்கங்கள், காங் கிரஸ், பெரியாரிய, அம்பேத்கரிய அமைப்பு களின் தலைவர்கள் புதனன்று கோவை மாந கர காவல் துறை ஆணையரிடம் மனு அளித் தனர்.  அம்மனுவில் தெரிவித்துள்ளதாவது, வருகிற நவம்பர் 6 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்புகள் கோவையில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டிருப்பதாக அறிகிறோம். சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு முழுவ தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஊர்வலம்  நடத்த அனுமதி அளித்திருந்ததையும், அதைத் தொடர்ந்து மாநில காவல்துறை தலைவர் அனுமதி அளித்திருந்ததையும் நாங்கள்  அறிவோம். இருந்த போதும் சென்னை உயர் நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அக் டோபர் முதல் வாரத்தில் அனுமதியளித்தது.

அதன் பிறகு கடந்த 25 நாட்களில் கோவை யில் கார் வெடிப்பு உட்பட ஏராளமான சம்ப வங்கள் நடந்து முடிந்து விட்டது. கோவையை  பதற்ற நிலைமையிலேயே வைத்திருக்க வேண்டும் என்று மத அடிப்படைவாதிகள் கருதுகிறார்கள். அதற்கு ஏற்ப அடுத்தடுத்து பல காரியங்களையும் செய்து வருகிறார் கள். எனவே கோவை அமைதிக்கும், சமூக  நல்லிணத்திற்கும் ஆர்எஸ்எஸ் நடத்தும் ஊர் வலம் எந்த விதத்திலும் உதவியாக இருக் காது. எனவே மேற்படி ஊர்வலத்திற்கு கோவையில் அனுமதி அளிக்க கூடாது என  மனு அளித்தனர்.  இக்கோரிக்கை மனுவை 20க்கும் மேற் பட்ட இயக்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர். சி.பத்ம நாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொருளாளர் எம். ஆறுமுகம், மாவட்ட செய லாளர் சி.சிவசாமி, காங்கிரஸ் கட்சியின் மாந கர மாவட்ட தலைவர் வக்கீல் கருப்புசாமி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொது  செயலாளர். கு.ராமகிருட்டிணன், விசிகவின்  துரை இளங்கோவன், திராவிடர் தமிழர் கட்சி  மாநில தலைவர் வழக்கறிஞர் சி.வெண்மணி,  சிபிஐ(எம்எல்) லிபரேன் சந்தானம், திராவி டர் விடுதலை கழகம் மாநகர் மாவட்ட தலை வர் நேருதாஸ், கோவை ரவிக்குமார், புரட்சி கர இளைஞர் முன்னணியின் மாவட்ட செய லாளர் மலரவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.