districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஒரு புரோட்டா ரூ.32: உணவக பகல் கொள்ளை  ஆட்சியர் தலையிட சிபிஎம் வலியுறுத்தல்

ஈரோடு, அக்.3- ஈரோட்டில் பல பகுதிகளில் சாதா ரண உணவகத்தில் ஒரு புரோட்டா ரூ.32க்கு விற்பனை செய்து பகல் கொள்ளை அடிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் தலையீடு செய்து உணவுப் பொருள் விலை கட்டுப்பாட்டு சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது, ஈரோடு மாவட் டத்தில் உள்ள பல உணவகங்களில் உணவு பொருள் விலை கட்டுப்பாட்டு சட்டப்படி விலை நிர்ணயிக்காமல் பகல் கொள்ளை அடிக்கப்படுகிறது. பெருந் துறை சாலையில் உள்ள உணவகத்தில் 2 பரோட்டா மற்றும் ஒரு ஆம்லெட் உட் கொண்டேன். விலை எதுவும் விசாரிக் காத நிலையில், உணவருந்திய பின்  அவர்கள் அளித்த பில்லை கண்டு அதிர்ச் சியடைந்தேன். ஒரு புரோட்டா விலை ரூ.32 வீதம் 64. ஆம்லெட் ரூ.29. ஜிஎஸ்டி  ரூ.4.66 மற்றும் சில்லரை பாக்கியை சரி  செய்ய மேலும் 35 பைசா சேர்த்து ரூ.98 என பில்லில் குறிப்பிடப்பட்டிருந்தது.  நட்சத்திர அந்தஸ்து பெற்ற உண வகமோ அல்லது குளிரூட்டப்பட்ட விடு தியும் அல்ல. சாதாரண மக்கள் பயன் படுத்தும் கடையாகவே உள்ளது. இங்கு  வழங்கப்படும் உணவு பொருட்க ளுக்கு நிர்ணயித்துள்ள விலை என்பது விலை கட்டுப்பாட்டு சட்டத்திற்கு உட்பட் டதுதான். ஆனால், அதிகாரிகளின் கண் காணிப்பு இல்லாததன் விளைவாக தங் களது விருப்பதிற்கேற்ப விலை நிர்ண யம் செய்து கொள்ளையடிக்கப்படுகி றது. ஆகவே இதுபோன்ற உணவகங் கள் மீது ஆய்வு செய்து சட்ட மீறல்கள்  மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என தெரிவித்துள்ளார்.

சாலை விபத்தில் இளைஞர் பலி

கோவை, அக்.3–  கோவை ஒத்தகால் மண் டபம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (32). இவர் பொள்ளாச்சி - கோவை சாலையில் நடந்து வந்தார். மயிலேரிபாளையம் அருகே  வந்த போது அந்த வழியாக வந்த மினி வேன் கட்டுப் பாட்டை இழந்து ஆறுமுகம் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத் தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை  செய்த மருத்துவர்கள் ஏற்க னவே இறந்து விட்டதாக தெரி வித்தனர். இதுகுறித்து போலீ சார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

மது அருந்த பணமில்லாத விரக்தியில் இளைஞர் தற்கொலை

மது அருந்த பணமில்லாத விரக்தியில் இளைஞர் தற்கொலை கோவை, அக்.3– மது அருந்த பணமில்லாத விரக்தியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது.  கோவை சூலூர் கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் விஜய் (30). இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது.  வேலைக்கு செல்ல விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், விஜய் தனது தாயாரிடம் மது அருந்துவ தற்காக பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் தர மறுக் கவே, விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத் தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இதுகுறித்து தகவலறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத் திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி  வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காந்தி ஜெயந்தி: விடுமுறை அளிக்காத 75 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு

நாமக்கல், அக்.3- நாமக்கல் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி யன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 75 நிறுவனங்கள் மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணை யர் (அமலாக்கம்) திருநந்தன் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காந்தி ஜெயந்தியை யொட்டி விடுமுறை அளிக்காத நிறுவனங் கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, தொழிலாளர்களுக்கு சம்ப ளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம் அளிக் கப்படுகிறதா? அல்லது பணியாளர்கள் பணி புரிந்தால் அவர்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்க ளுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப் படுவதாக நிர்வாகத்தால் படிவம் சமர்ப் பிக்கப்பட்டுள்ளதா? என நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 25 வணிக நிறுவனங்களிலும், 47 உண வகங்களிலும் ஆய்வு செய்தனர். இதேபோன்று 12 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களி லும் ஆய்வு செய்தனர். மொத்தம் 90 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 75 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு காந்தி ஜெயந்தியன்று  விடுமுறை அளிக்காமலும், இரட்டிப்பு சம்ப ளம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க  24 மணி நேரத்திற்கு முன்னதாக படிவம் சமர்ப் பிக்கப்படாததும் தெரியவந்தது. இதனைய டுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரி மையாளர்கள் மீது தொழிலாளர் நலத்துறை  சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தடையை மீறி மது விற்ற 36 பேர் கைது

தடையை மீறி மது விற்ற 36 பேர் கைது கோவை, அக்.3–  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடு முறை அளிக்கப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி சிலர்  மது பாட்டில்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கத்துறை, புறநகர் போலீசார் ஆகியோர் தீவிர சோதனை மேற்கொண்டு, தடையை மீறி மாநகரில் மது  விற்ற 16 பேரும், புறநகரில் 20 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 734 மதுபாட்டில்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

வேளாண் பட்டதாரிகளுக்கு நாமக்கல் ஆட்சியர் அழைப்பு

நாமக்கல், அக்.3-  வேளாண் பட்டதாரி இளைஞர் கள் தொழில்முனைவோராக உயர்த்த நாமக்கல் மாவட்ட நிர்வா கம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்ப தாவது, நாமக்கல்  மாவட்டத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம்  2022-23-ம் ஆண்டு மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. இதன் மூலம் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு நிதி உதவி தரப் படுகிறது. இதில், பட்டதாரி ஒருவ ருக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கபடவுள்ளது. இத்திட் டம் கலைஞரின் அனைத்து கிராம  ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச் சித் திட்டத்தில்  ஒருங்கிணைந்து  செயல்படுத்தபட  உள்ளது. குறு நிறு வனங்களை முறைபடுத்தும் திட்டம் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி யின் கீழ் அனுமதிக்கக் கூடிய திட்டங் களின் அடிப்படையில் சுய தொழில் கள் தொடங்கலாம். தரிசு மற்றும்  மானாவாரி நிலங்களில் உற்பத் தியை பெருக்க வேளாண் பட்டதாரி கள் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம். மேலும் விவசாயி களிடமிருந்து காய்கறி மற்றும் பழங் களை நியாமான விலையில் கொள் முதல் செய்து நுகர்வோருக்கு விநி யோகிக்கலாம். இத்திட்டத்தில் பயன்பெற 21  முதல் 40 வயதிற்கு உட்பட்ட வேலை யில்லா வேளாண்மை, தோட்டக் கலை மற்றும் வேளாண் பொறியியல் பட்டதாரி இளைஞர்கள், சிறந்த  கணினி புலமையும் வேளாண்மை தொடர்புடைய செயலிகளை பயன் படுத்தும் திறனும் உள்ளவராக  இருத் தல் வேண்டும். விண்ணப்பத்துடன் 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான் றிதழ், பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை  நகல்,வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் விரிவான செயல்திட்ட அறிக் கையுடன் விண்ணப்பத்தினை  சம்மந் தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்க  வேண்டும். மேலும் இது சம்பந்த மான கூடுதல் விவரங்களுக்கு சம்மந் தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் அல்லது நாமக்கல், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டியலின மக்களுக்கு அடிப்படை  வசதி செய்து தர கோரிக்கை

திருப்பூர், அக்.3- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஊத்துக் குளி தாலுகா மக்கள் கோரிக்கை மாநாடு ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. ஊத்துக்குளி ஆர்.எஸ். பகுதியில், விவசாயத் தொழிலா ளர் சங்க தாலுகா தலைவர் ஆர்.மணியன் தலைமையில் நடை பெற்ற இம் மாநாட்டை, மாவட்டத் துணைச் செயலாளர் ஏ.சண் முகம் துவக்கி வைத்தார். விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் ஆர்.குமார், சிபிஎம் தாலுகா செயலாளர் எஸ்.கே.  கொளந்தைசாமி, சிஐடியு மாவட்ட குழு உறுப்பினர் வி.கே. பழனிச்சாமி, இன்ஜினியரிங் சங்க பொருளாளர் வி.காமராஜ்,  வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் கு.பாலமுரளி உள்ளிட் டோர் வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில், ஊத்துக்குளி தாலுக்கா புதிய நிர்வாகிகள்  தேர்வு செய்யப்பட்டனர். ஊத்துக்குளி தாலுக்கா தலைவர் ஆர்.மணியன், துணைத் தலைவர் கே.எஸ்.ராமசாமி, செயலா ளர் கே.பிரகாஷ், துணைச் செயலாளர் ஆர்.கருப்பசாமி, பொருளாளர் ஏ.எம்.பழனிச்சாமி மற்றும் 13 பேர் கமிட்டி உறுப் பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ரெட்டியாபாளையம் ஊராட்சி, அம்பேத்கார் நகர், அய்யா  முத்தையன்காடு பகுதி பட்டியலின மக்களுக்கு, ஊத்துக்குளி  - சென்னிமலை சாலையில் இருந்து தார் சாலை அமைத்து  தர வேண்டும். ஆற்று குடிநீர், அங்கன்வாடி மையம், மயான  வசதி செய்து தர வேண்டும், இதுவரை வழங்கப்பட்ட இலவச  வீட்டு மனை பட்டாவை ஆவணங்களில் பதிவு செய்து அடங் கல் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கமிட்டி உறுப்பினர் எம்.பழனிச்சாமி நன்றி கூறினார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

திருப்பூர், அக். 3- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி  குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட் டது. திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி சம்பத், தனது மனைவி மற்றும் மகனுடன்  அப்பகுதியில் தங்கி 6 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம்  செய்து வருகிறார். இந்நிலையில் இவரது தோட்டத்திற்கும், அருகாமையில் உள்ள நல்லசாமி என்பவர் தோட்டத்திற்கும் இடையே எல்லை சம்பந்தமான பிரச்சனை இருந்து வந்துள் ளது.  இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி வழக்கம் போல் இரவு  தண்ணீர் மோட்டாரை நிறுத்திவிட்டு சம்பத் வீட்டிற்கு சென்ற  நிலையில் நல்லசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் சம்பத் தின் தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை  அகற்றிவிட்டு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்து விட்டு சென்றுள்ளனர்.  இது குறித்து நல்லசாமியிடம் கேட்டபோது ஜேசிபி வாக னத்தை வைத்து கொலை செய்து விடுவேன் எனவும், தகாத  வார்த்தையால் பேசி, மன உளைச்சல் ஏற்படுத்தி உள்ளார்.  இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித  நடவடிக்கையும் எடுக்கவில்லை என காரணம் கூறி சம்பத், தனது மனைவி மற்றும் மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.அப்போது அங்கு பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் காப்பாற்றி  உடனடியாக அவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென் றனர். மேலும், அவரது மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட் சியர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்ப டும் என உறுதி அளித்தார்.

பள்ளி தூய்மை பணியாளருக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்க கிராம சபை கோரிக்கை

திருப்பூர், அக். 3 - பழையகோட்டைப்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள் ளித் தூய்மைப் பணியாளருக்கு மாதந்தோறும் ஊதியம் வழங் கக் கோரி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஒன்றியம், பழைய கோட்டை ஊராட்சி கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்றத்  தலைவர் எம். மீனாட்சி தலைமையில் கண்ணியங்கிணறு சமு தாய நலக்கூட வளாகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. காங்க யம் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளர் சரவணக்குமார் அரசுப் பற்றாளாராகக் கலந்து கொண்டார். இக் கூட்டத்தில்  பழையகோட்டைப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநி லைப் பள்ளி வளர்ச்சி, குழந்தைகளின் கல்வி நலனுக்கு கோரிக்கைகளை நிறைவேற்ற  வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காலி இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு உடனடியா கத் தற்காலிக ஆசிரியர், விரைவில் நிரந்தர ஆசிரியரும்  நிய மிக்க வேண்டும். சுற்றுவட்டார கிராமங்களின் மாணவர்கள் நலன் கருதி, இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும். ஊரக உள்ளாட்சித் துறை மூலம் நியமிக்கப் பட்டுள்ள பள்ளித் துப்புரவுப் பணியாளருக்கு பிப்ரவரி 2022  ஆம் மாதத்தில் இருந்து வழங்க வேண்டிய ஊதிய நிலு வையை வழங்க வேண்டும். ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊரக வேலை  உறுதியளிப்புத் திட்ட பணியாளர்கள் மூலம் வாரம் ஒரு முறை  பள்ளி வளாகத்தை துப்புரவு செய்து கொடுக்க  வேண்டும்.  தனி ஆழ்குழாய் கிணறு அமைத்து தர வேண்டும். கூடுதல்  கழிவறை மற்றும் சுற்றுச்சுவர் கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பருத்தி நூல் விலை குறைப்பு பலன் அளிக்குமா?

திருப்பூர், அக். 3- அக்டோபர் மாதத்திற்கான பருத்தி நூல் விலை கிலோவுக்கு ரூபாய் 40  குறைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த  விலை குறைப்பு பலன் அளிக்குமா  என்று பின்னலாடை உற்பத்தியாளர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். பஞ்சு, நூல் விலை தொடர்ந்து அதிக ரித்து வந்ததால், பின்னலாடை ஏற்றுமதி  மற்றும் உற்பத்தி கடுமையாக பாதித் தது. இதனால் விலை கட்டுபடியாகா மல் புதிய ஆர்டர்கள் பெற முடியாமல்  பல நிறுவனங்கள் மூடப்பட்டது. இந்நி லையில் நூல் விலை சனிக்கிழமை கிலோ விற்கு 40 ரூபாய் குறைந்தது.  அதன்படி ஒரு கிலோ 20-வது நம்பர்  கோம்டு நூல் ரூ.293-க்கும், 24-ம் நம்பர்  ரூ.305-க்கும், 30-ம் நம்பர் ரூ.315-க்கும்,  34-ம் நம்பர் ரூ.335-க்கும், 40-ம் நம்பர் ரூ. 355-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல்  கிலோ ரூ.285-க்கும், 24-ம் நம்பர் ரூ.  295-க்கும், 30-ம் நம்பர் ரூ.305-க்கும்,  34-ம் நம்பர் ரூ. 325-க்கும், 40க்கும் நம்பர்  ரூ.345-க்கும் விற்பனை செய்யப்படுவ தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நூல் விலை குறைந்தாலும், இது உட னடியாக பலன் அளிக்காது என்று உற் பத்தியாளர்கள் தெரிவித்தனர்.  நூல்  விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவ தால், தொழில்துறையினர் ஆடைகளின்  விலையை நிர்ணயம் செய்வதில் குழப் பம் ஏற்படுகிறது. அவர்கள் நூல் கொள்முதல் செய் யும்போது இருக்கும் விலையை மைய மாக வைத்து ஆடை விலையை தீர்மா னிப்பார்கள். அதிக விலைகொடுத்து நூல் வாங்கி இருந்தால் அதற்கேற்ப  ஆடை விலையும் அதிகமாக இருக்கும்.  அந்த சமயத்தில் நூல் விலை குறையும்  பொழுது, நூல் விலைக்கு ஏற்ப வர்த்த கர்கள் ஆடை விலையை குறைத்து கேட்கும் நிலை உள்ளது. இதனால் உற் பத்தியாளர்களுக்கு ஆடை விற்பனை யாவதில் பாதிப்பு ஏற்படுவதுடன், வேறு  வழியில்லாத சூழ்நிலையில் விலை குறைத்து வழங்கும்போது நஷ்டம் ஏற்ப டுகிறது. ஏற்றுமதி சந்தையில் மட்டுமின்றி உள்நாட்டு ஆடை விற்பனையிலும் பாதிப்பு உள்ளது என்று உற்பத்தியா ளர்கள் கூறினர். அதுமட்டுமின்றி தற்போது விலை யும் இறங்கு முகமாக இருப்பதால், தற் போது அறிவிக்கப்பட்ட ரூபாய் 40 விலை  குறைப்பை விட இன்னும் விலை குறை வதற்கு வாய்ப்பு இருப்பதாக அனுமா னித்து நூல் வாங்குவதை தள்ளிப் போடும் நிலையும் உள்ளது. அதனால்  உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு உள் ளது. இதைவிட விலை குறையும் பொழுது தற்பொழுது நூல் வாங்கிய வர்கள் அதற்கேற்ற இழப்பை சந்திக் கும் நிலையும் உள்ளது. நூல் விலை  தொடர்ந்து அதிகரிப்பதாலும் பாதிப்பு  ஏற்படுகிறது, தொடர்ந்து குறைவதா லும் பாதிப்பு ஏற்படுகிறது, ஒரு குறிப் பிட்ட காலத்திற்காவது நூல் விலை சீராக இருப்பதே பின்னலாடை தொழில்  துறையினருக்கு நன்மை பயக்கும் என்று உற்பத்தியாளர்கள் ஒருமித்த குர லில் கூறுகின்றனர்.

ஆண்டுக்கு 20 சதவீத வளர்ச்சி: திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் பேட்டி

திருப்பூர், அக். 3 - திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியில் ஆண்டுக்கு 20 சதவீத  வளர்ச்சி ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று திருப் பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவராக பொறுப்பேற்று இருக் கும் கே.எம். சுப்பிரமணியம் கூறியிருக்கிறார். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க புதிய நிர்வாக குழு உறுப்பி னர்கள் தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெற்ற கூட்டத்தில்,  ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியம் கூறியதாவது: தமிழக அரசு கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர  நடவடிக்கை மேற்கொண்டு வரக்கூடிய சூழ்நிலையில் அதனை திருப்பூர் வரை விரிவாக்கம் செய்ய அரசிடம் கோரிக்கை வைப்பதற்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் தொழி லாளர்கள் தங்கும் வகையில் குடியிருப்பு வசதிகள் ஏற்பாடு  செய்ய இருப்பதாகவும் ஆண்டுக்கு 20 சதவீத பின்னலாடை  உற்பத்தி வளர்ச்சியை உறுதி செய்ய இருப்பதாகவும் , லண் டன் மட்டும் யூரோ நாடுகளுடன் தொழில் வளர்ச்சியை மேம்ப டுத்த இருப்பதாகவும் தெரிவித்தார். தீபாவளிக்கு பின்பு  தொழில் மீண்டும் பழைய வளர்ச்சியை அடையும் வகையில்  பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், வேலைக்கு ஆட்கள்  தேவை என்ற விளம்பரம் கொடுக்கும் அளவுக்கு திருப்பூர்  பின்னலாடைத்துறை மீண்டும் வளர்ச்சியை அடையும் என வும் தெரிவித்தார். தொழிலாளர்களுக்கான அடுக்குமாடி குடி யிருப்பு மற்றும் விபத்து காப்பீடு அடையாள அட்டை ஆகி யவை ஏற்படுத்தி தரப்படும் எனவும் தெரிவித்தார்.

நாமக்கல் நாதன் படைப்புலகம்

திருப்பூர், அக். 3- திருப்பூர் வாழ் எழுத்தா ளர் நாமக்கல் நாதனின்  படைப்புலகம் என்ற  கருத்த ரங்கமும் நடைபெற்றது. திருப்பூர்  மாணவ, மாணவி யர்களின் ஓவியக் கண்காட்சி  மக்கள் மாமன்ற நூலகத்தில்  ஞாயிறன்று நடைபெற்றது. வழக்கறிஞர் சாமக் கோடாங்கி ரவி கண்காட்சி யைத் துவக்கி வைத்தார்.  நாமக்கல் நாதனுக்கு 75 வயது  நிறைவு பெறுவதையொட்டி இந்தக்கருத்தரங்கம் நடை பெற்றது. மக்கள் மாமன்றத் தலைவர் சி. சுப்ரமணியம் தலைமை வகித்தார். நாமக் கல்நாதனின் படைப்புகள்  பற்றி சுப்ரபாரதிமணியன்,அ.மு. ஜெகந்நாதன்,  வெ.செந் தில்குமார், க.தங்கவேல், வின் செண்ட்ராஜ், முத்துபாரதி    ஆகியோர் பேசினர். நாமக்கல்நாதனின் “என்  காலடித்தடங்கள் “ நூலை பெரம்பலூர் எழுத்தாளர் முனைவர் சின்னசாமி வெளி யிட,  ஈரோடு எழுத்தாளர் செந் தில்குமார் பெற்றுக்கொண் டார்.

கிராம சபை கூட்டத்திற்கு அழைப்பு விடுவிக்கவில்லை: சிபிஎம் கவுன்சிலர் தர்ணா 

நாமக்கல், அக்.3- கோக்கலை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத் திற்கு அழைப்பு விடுக்காத ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பிடிஓ அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை ஊராட்சியில் அரசு பள்ளி வாளகத்தில்  காந்தி  ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கோக்கலை ஊராட்சியின் ஒன்றிய 5வது வார்டு கவுன்சிலராக மார்க்சிஸ்ட் கட்சியின் சு.சுரேஷ்  உள்ளார். இவருக்கு கோக் கலை ஊராட்சியின் சார்பில் நடைபெறும் கிராம சபை கூட்டத் திற்கு தொடர்ந்து தகவல்கள் தருவதில்லை என கிராம சபை கூட்டத்திலேயே வலியுறுத்தி பேசியுள்ளார். ஆனாலும், அதிகாரி கள் இதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து தகவல் தரா மல் தொடர்ந்து செயல்படுகின்றனர். இதனையடுத்து எலச்சி பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சுரேஷ் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, காவல் ஆய்வாளர் குலசேகரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உதவியாளர் சாமி நாதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இனி வரும் காலத்தில் கூட்டத்திற்கு முறையான அழைப்பு தருகி றோம் என உறுதியளித்தனர். இதனையடுத்து ஒன்றிய கவுன் சிலர் சு.சுரேஷ் போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

587 புது ரேசன் கார்டுகள் வருகை

சேலம், அக்.3- சேலம் மாவட்டத்தில் கடந்த செப்.26 ஆம் தேதி யன்று 587 புது ரேசன் கார்டு கள் வரப்பெற்று, அவை 14 தாலுகா அலுவலகங்க ளுக்கு தனித்தனியே அனுப் பப்பட்டுள்ளன. அதில் அதிக பட்சமாக சேலம் மேற்கு தாலு காவுக்கு 101 ரேசன் கார்டு கள் அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பித்த பயனாளிகள் சம்பந்தப்பட்ட தாலுகாவுக்கு சென்று புது ரேசன் கார்டை கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம். நடப்பாடு இது வரை 19 ஆயிரத்து 896 புது ரேசன் கார்டுகள் வழங்கப்பட் டுள்ளன. இத்துடன் சேர்த்து,  தற்போது மாவட்டத்தில் மொத் தம் ரேசன் கார்டு எண்ணிக்கை 11 லட்சத்து 813 ஆக அதிகரித் துள்ளது.

சர்வாதிகாரியாக செயல்படும் செயல் அலுவலர் ஆட்சியரிடம் திமுக பேரூராட்சி துணை தலைவர் புகார்

ஈரோடு, அக்.3- சர்வாதிகாரியாக செயல்படும் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நல்லாம்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் கே.விஜயகுமார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித் துள்ளார். ஈரோடு மாவட்டம், நல்லாம்பட்டி பேரூராட்சி துணைத்தலைவராக செயல்பட்டு வருபவர் கே.விஜய குமார். திமுகவைச் சேர்ந்த இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நல்லாம்பட்டி பேரூ ராட்சியில் செயல் அலுவலராக சம்பத் குமார் உள்ளார். இவர் போலி ரசீதுகள் போட்டு கையாடல் செய்து வருகிறார். மன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட தீர்மா னங்களை எதையும் நிறைவேற்ற வில்லை. அடிப்படை வசதிகள் கூட செய்து தர மறுக்கிறார். வரவு-செலவு கணக்குகள் முறையாக அளிப்ப தில்லை. இதனால் மக்களின் குறை களை தீர்க்க முடியவில்லை. நான் உட் பட 9 கவுன்சிலர்கள் கையெழுத்திட வில்லை என்றாலும் தீர்மானங்களை நிறைவேற்ற அவருக்கு அதிகாரம் உள்ளது என்கிறார். இதற்கு பேரூராட்சி மன்ற தலைவரும் உடந்தை எனத் தெரி கிறது. இதுகுறித்து பேரூராட்சிகள் உதவி இயக்குநரிடம் கூறியபோது, எனக்கு நேரமில்லை, செயல் அலுவலரை அணு சரித்து செல்லுங்கள் என்று கூறிவிட் டார். ஆகவே செயல் அலுவலர் மீது நட வடிக்கை எடுத்து நேர்மையான செயல் அலுவலரை பணியமர்த்துமாறு கூறி யுள்ளார். மேலும், இளநிலை உதவி யாளரையும் மாற்ற வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

தென்னைக்கு உரிய ஆதார விலை கேட்டு போராட்டம் அறிவிப்பு

தென்னைக்கு உரிய ஆதார விலை கேட்டு போராட்டம் அறிவிப்பு கோவை, அக்.3- தென்னைக்கு உரிய ஆதார விலை நிர்ணயம் செய்யப்படா விட்டால், தலைமை செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு தேங்காய்களை கொட்டி போராட்டம் நடைபெறும் என கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டம், சூலூர் சந்தை பேட்டையில் உள்ள கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கங்கள் மற்றும் ஏர்முனை  இளைஞர் அணி சங்கத்தில் தென்னை விவசாயிகள் தென்னை  சார்ந்த உற்பத்தி பொருட்களின் விலை வீழ்ச்சி மற்றும் விற்பனை, தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியைச் சார்ந்த 150க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர். இதன் பின், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர்  ஏ.கே சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தென் னைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக 105 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்த்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். பாமாயில் இறக்குமதியை தவிர்த்து, சத்துணவுகளில் தேங்காய் எண்ணெயை சேர்க்கவும், ரேசன் கடைகளில் தேங் காய் எண்ணெயை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஏற்கனவே கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்தி ருப்பதாலும், தேங்காய்கள் குறைந்தளவே விற்பனையாகி வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிப்பு உள்ளாகி வரு கின்றனர். இப்பிரச்சனை குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னை தலைமை செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேங்காய்களை கொட்டி போராட்டம் நடத்த இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தொடர் பண்டிகை எதிரொலி: உதகையில் பூக்கள் விலை கடும் உயர்வு

உதகை, அக்.3- ஆயுத பூஜை உள்ளிட்ட அடுத்தடுத்த பண்டிகை வருவதால் பூக்கள் விலை கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது.  உதகையில் மல்லி கைப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்து 600க்கு விற் பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டுக்கான ஆயுத பூஜை செவ் வாயன்று (இன்று) கொண்டாடப்படுகிறது. ஆயுத பூஜையின் போது பொதுமக்கள் பூக் கள், பழங்கள், வாழை கன்றுகள், பொரி, சுண் டல் உள்ளிட்ட பொருட்களை வாங்க உதகை மார்க்கெட் மற்றும் சாலைகளில் பொது மக்கள் மற்றும் சிறு வியாபாரிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதன்படி அப்பர் பஜார், லோயர் பஜார், மெயின் பஜார் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர். இந்நிலையில், திங்களன்று காலை முதலே மார்க்கெட் சாலை உள் ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டது. நீண்ட தூரத்திற்கு வாக னங்கள் அணிவகுத்து நின்றதால் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்து நெரிசலை சரி  செய்தனர். இதற்கிடையே தொடர் மழை காரணமாக வரத்து குறைந்ததால் பூக்கள் மற்றும் பழங் களின் விலை உயர்ந்தது. இதன்படி கடந்த வாரம் ஆயிரம் ரூபாய்க்கு விற்ற மல்லிகை திங் களன்று ரூ.2 ஆயிரத்து 600க்கு விற்கப்பட் டது. இதேபோல் மற்ற பூக்களும் விலை உயர்ந்தன. இதேபோல் எலுமிச்சை, பூசணிக் காய், பொரி, அவல், சுண்டல் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயர்ந்து காணப் பட்டது.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை 879 வியாபாரிகளுக்கு ரூ.45.50 லட்சம் அபராதம்

கோவை, அக்.3- கோவை மாவட்டத்தில் தடை  செய்யப்பட்ட புகையிலை பொருட் கள் விற்பனையில் ஈடுபட்ட 879 வியா பாரிகளுக்கு ரூ.45 லட்சத்து 50 ஆயி ரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மாவட்ட உணவு பாது காப்பு துறை சார்பில் மாவட்ட அள விலான வழிகாட்டுதல் குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்செல்வன், ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர் வாகிகள், பேக்கரி சங்க நிர்வாகிகள், நுகர்வோர் அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட் டத்தில், அதிகாரிகள் பேசுகையில், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர் ணய ஆணையத்தின் தரவரிசை பட்டி யலில் கோவை மாவட்டம் சிறப்பான இடத்தை பிடித்து, முதல்வரின் பாராட்டை பெற்றுள்ளது. கோவை யில் கடந்த ஏப்ரல் மாதம் 36 ஆயி ரத்து 769 உரிமங்கள் பதிவு செய்யப் பட்டிருந்தது. தற்போது அது 39 ஆயி ரத்து 824 ஆக அதிகரித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட் டில் உள்ள 35 கோவில்களின் அன்ன தானம் மற்றும் பிரசாத கூடங்களுக்கு பி.எச்.ஓ.ஜி. தரச்சான்று வழங்கப் பட்டு உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 5 ஆயி ரத்து 48 உணவு மாதிரிகள் எடுக்கப் பட்டுள்ளது. அதில் ஆயிரத்து 120 சிவில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இதில், மாவட்ட தீர்ப்பு  அலுவலர் மூலம் 923 வழக்குகளில் ரூ.92 லட்சத்து 11 ஆயிரத்து 500 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 565 குற்றவியல் வழக்கு களில் 233 வழக்குகளில் நீதிமன்றம்  மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிறை தண்டனையுடன், ரூ.59 லட்சத்து 75  ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப் பட்டது. மாவட்டத்தில் இதுவரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 879 வியா பாரிகளுக்கு ரூ.45 லட்சத்து 50 ஆயி ரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோவையில் பாதுகாப்பாக உணவு வழங்குவது குறித்த தர நிர்ணய சான்றிதழ்களை 354 நிறுவனங்கள் பெற்றுள்ளன. தரமில்லாத பிளாஸ் டிக் பொருட்கள் பயன்படுத்திய 260  வியாபாரிகளுக்கு ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள் ளது, என்றனர்.