நாமக்கல், ஜூன் 26- பழைய பாதையில் வாகனங்களை இயக்காமல் வழித்தடங்களை மாற்றி யுள்ளதால், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேலம், திருச்செங்கோடு, நாமக்கல் செல்லும் அனைத்து பேருந்துகளும் அண்ணா சாலை வழியாக செல்கிறது. அதே போல், சேலம், நாமக்கல், திருச்செங் கோடு பகுதியில் இருந்து வரும் பேருந் துகள் பழைய பேருந்து நிலையம் கிருஷ்ணா திரையரங்கம், பட்டணம் சாலை வழியாக புதிய பேருந்து நிலை யத்துக்கு சென்றது. இந்த நடைமு றையே கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சேலம், நாமக் கல், திருச்செங்கோடு செல்லும் அனைத்து பேருந்துகளும் பட்டணம் சாலை, கிருஷ்ணா திரையரங்கம் வழி யாகச் சென்று பழைய பேருந்து நிலை யம் வந்து, சேலம், நாமக்கல், திருச் செங்கோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வகையிலும், சேலம், நாமக் கல், திருச்செங்கோடு பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் அண்ணா சாலை வழியாக வந்து புதிய பேருந்து நிலையத்திற்கு வரும் வகையில் போக் குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டன. இந்த போக்குவரத்து மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவ ரத்து நெரிசலால் பள்ளி, கல்லூரி மற்றும் பல்வேறு வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இதே நேரத்தில் ஆத்தூரில் இருந்து வரும் லாரிகள் - கனரக வாகனங்கள் - திருச்செங்கோடு, சேலத்தில் இருந்து வரும் கனரக வாக னங்கள் புதிய புறவழிச் சாலை வழியாக செல்லாமல் தொடர்ந்து இவ் வழியாகவே பயணித்து வருவதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டு வருகிறது. எனவே, பழைய முறைப்படியே பேருந்துகள் இயக்கப் படவும், நகரப் போக்குவரத்து காவல் துறையினர் போக்குவரத்தில் தனிக்கவ னம் செலுத்தி நெரிசல் ஏற்படாத வண் ணம் போக்குவரத்தை சீரமைக்க வேண் டும் என பொதுமக்கள், வாகன ஓட்டி கள் கோரிக்கை விடுக்கின்றனர்.