தருமபுரி, மார்ச் 15- பாலக்கோட்டில் உள்ள கால்வாயில் தேங்கும் கழிவு களால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் திருவிழா கடந்த வாரம் நடைபெற்றது. இத் திருவிழாவில் லட்சகணக்கானோர் கலந்து கொண்டனர். மேலும், சாமி சிலைக்கு ஊற்றிய பால் கோவில் வளாகத் தில் உள்ள சாக்கடை கால்வாயில் கலந்து தேங்கி நின்று துர் நாற்றம் வீசி வருகிறது. மேலும், சாக்கடை கால்வாயில் கோழி கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்து சாக்கடை நீர் செல்லாமல் தேங்கி உள்ளதால் புழுக்கள் உற்பத்தியாகி வரு கிறது. மேலும், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் பொருட்களை கோவில் வளாகத்திற்குள் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், சுற்றுப் பகுதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதி கரித்துள்ளது. இதுகுறித்து கோவில் அதிகாரிகளிடம் பொது மக்கள் முறையிட்டும் இதுவரை சாக்கடை கால்வாய் தூர் வாரப்படாமல் உள்ளது. தற்போது வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் பொது மக்கள் காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்ற னர். இந்த சாக்கடை கால்வாயால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மேலும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டு சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.