சேலம், நவ.12- நகராட்சி, மாநகராட்சி களில் ஆட்குறைப்பு அர சாணை 152 ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பிரதி நிதித்துவ பேரவையில் தீர் மானம் நிறைவேற்றப் பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை சேலம் சுனில் மைத்ரா நினைவகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ந.திருவேரங்கன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆர்.செல்வம் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் சுரேஷ் மற்றும் மாவட்ட பொருளாளர் வே.செல்வம் ஆகி யோர் வேலை அறிக்கை மற்றும் வரவு-செலவு அறிக்கை முன்வைத்தனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு சரண்டர் விடுப்பை மீண்டும் வழங்கிட வேண்டும். ஜூலை 22 முதல் வழங்க வேண்டிய அகவிலைப் படியை, ஒன்றிய அரசு வழங்கியது போல் மாநில அரசு ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும். மகளிர் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். அலுவலகங்களில் பணிபுரியும் மகளிர்களுக்கு உணவருந்த தனி அறை, கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. நிறைவாக, சங்கத்தின் மாநில துணை பொது செயலாளர் மு.சீனிவாசன் நிறைவு யாற்றினார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் முன்னணி ஊழி யர்கள் திரளானோர் பங்கேற்றனார்.