இருவாச்சி குஞ்சு இறந்த நிலையில் மீட்பு
மேட்டுப்பாளையம், மே 14- கல்லார் பழப்பண்ணையில், இருவாச்சி பறவையின் குஞ்சு இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் பழப்பண்ணையில் ஸ்பேத்தோடியா மரத்தின் பொந்தில் இருவாச்சி பறவை கூடு கட்டி குஞ்சு பொரித்து இருந்தது. இந்நிலை யில், இருவாச்சி பறவையின் குஞ்சை வன பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். தொடர்ச்சியாக குஞ்சுக்கு, தாய் பறவை உணவழித்து வந்த நிலையில், கடந்த ஒரு நாளாக பொந்தில் இருக்கும் இருவாச்சி குஞ்சின் அசைவுகள் எதுவும் தென்பட வில்லை. இதனால், சனியன்று வன பணியா ளர்கள், ஏணி மூலம் ஏறி மர பொந்தை பார்த்த போது இருவாச்சி பறவையின் குஞ்சு இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. பின்னர், இருவாச்சி பறவையின் குஞ் சாசை தன்னார்வலர்கள் மற்றும் வனப்பணி யாளர்கள் முன்னிலையில் வன கால்நடை மருத்துவரால் உடர்கூராய்வு செய்யப் பட்டது.