districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

காட்டுத்தீ தடுப்பு விழிப்புணர்வு

உடுமலை, பிப்.12- திருப்பூர் வனக்கோட்டத் திற்குட்பட்ட தளிஞ்சி, மஞ் சம் பட்டி, கோடந்தூர், பொருப் பாறு உள்ளிட்ட 17 செட்டில் மென்ட்டுகளிலும், வன எல் லையில் உள்ள கிராமங்களி லும் காட்டுத்தீயினால் ஏற்ப டும் பாதிப்புக்கள் குறித்து  விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற்றன. கோடந் தூர், தளிஞ்சி மலைவாழ் மக்களுக்கு குதிரையாறு அணை தொடக்கப்பள்ளி யில் வனப்பகுதியில் தீயி னால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து உதவி வனப்பாதுகா வலர் மற்றும் உதவி இயக்கு நர் க.கணேஷ்ராம் தலைமை யில் கூட்டம் நடைபெற்றது. இதில் வனச்சரகர்கள் சிவக் குமார், சுரேஷ், மகேஷ் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

பட்டா வகை மாற்றத்திற்கு பல லட்சம் ஊழல்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

உடுமலை, பிப்.12 - உடுமலை வருவாய் கோட் டத்தில் நில பட்டா வகை மாற்றம் செய்ய பல லட்ச ரூபாய் ஊழல் நடை பெறுவதால், தவறு செய்யும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மக்கள் வலியுறுத்தி உள்ளனர். மக்கள் பயன்படுத்தாமல் உள்ள  நிலங்களை, அரசு நிலமாக இருந்த பதிவுகளை தனி நபர்கள் பெயரில் மாற்றம் செய்ய வருவாய்த் துறை  யில் பல லட்ச ரூபாய் பணம் பெறுவ தாக குற்றசாட்டு எழுந்துள்ளது. உடுமலைப்பேட்டை கோட் டத்தில் உள்ள உடுமலை வட்டம்,  மடத்துக்குளம் வட்டம் மற்றும்  கிராமங்களில் வருவாய்த்துறை ஆவணங்களில் 1985-ல் ஏற்படுத்தப் பட்ட தோராய பட்டா யூடிஆர் (UDR)  கிராம ஆவணங்களில் வீட்டு மனை யிடங்கள், நத்தம் இடங்கள் தவறு தலாகவோ அல்லது ஆவணங்கள் பரிசீலனை செய்யாமல் அல்லது ஆவணங்களின்றி உள்ள நத்தம் மனையிடங்கள், உரிமை கோராத வீடு, இடங்கள் ஆகியவை, வருவாய்  பதிவேடுகளில் நிறுத்தி வைக்கப் பட்டது என்ற எச் ஒ - எஸ். எப்.7, எஸ்.  எப்.8 என குறிப்பிடப்பட்டு, பட் டாக்கள் வழங்காமல் நிறுத்தி வைக் கப்பட்டிருக்கும்.  மேற்படி இடங்களுக்கு பட்டாக் கள் வழங்கிட சில விதிகள் பின் பற்றப்பட்டு பட்டாக்கள் வழங்கிட தமிழக அரசு வழிவகை ஏற்படுத்தி உள்ளன. இதன்படி 1969 முதல் தொடர்ச்சி யான ஆவணங்கள், ஊராட்சியின் தடையில்லா சான்று, இறப்பு, வாரிசு  சான்றுகள் பெற்று அனுபவ ரீதியில்  பட்டாக்கள் வழங்கிட வழி ஏற்படுத் தப்பட்டது. நில சீர்திருத்தத் துறை ஒப்புதலுடன் துணை ஆட்சியர், வரு வாய் கோட்டாட்சியர் ஆகியோ ருக்கு இதற்கான அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது. மேற்படி பட்டாக்கள் வழங்கு வதில் ரியல் எஸ்டேட் சந்தை மதிப் பிற்கு ஏற்றவாறு லட்சங்களில் லஞ்சம் விளையாடுவதால் ஏழை, எளிய மக்கள் பட்டா பெறுவதில் எளி தற்ற சூழல் நிலவி வருகிறது.  '

நிர்வாகரீதியில் சில சீர்திருத்தங் களை செய்து வரும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினித்  மேற்படி பட்டா வழங்கும் பிரிவினில் ஆய்வு செய்து இதுவரை வழக்கப்பட்ட, நிலுவையிலுள்ள ஆவணங்களை பரிசீலனை செய்தால் உண்மை நிலை அறிய வரும். மேலும் ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட நிபந்தனை பட்டாக்களுக்கு தடை யில்லா சான்று வழங்குவதிலும், ஆதிதிராவிடர் அல்லாத பிற நபர் களுக்கு பட்டா மாறுதல் செய்வதால்  ஆதி திராவிடர்களின் சமூக முன் னேற்றம் பாதிப்படைகிறது. இதிலும்  பல லட்ச ரூபாய் விளையாடுவதால் பட்டா பெறுவது ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ளது. ஒப்ப டைப்பு பட்டாக்களை சீர் செய்து அனைவரும் பட்டா பெறுவதனை உறுதி செய்திட வேண்டும். அரசு விதித்துள்ள நிபந்தனைகளையும் மீறி, ஆதிதிராவிட மக்களிடமிருந்து சட்டத்தை மீறி, பிற சமூக மக்க ளுக்கு மாறுதல் செய்யப்பட்ட பட் டாக்களை, கிராமவாரியாக கண்ட றிந்து மீட்டு, நிலமற்ற ஏழை, ஆதி திராவிட ஏழை மக்களுக்கு வழங்க ஆவண செய்ய வேண்டும். மேலும், கடந்த ஐந்து வருடங்கள்  வகை மாற்றம் செய்த அனைத்து பட்டாக்களையும் மறு ஆய்வு செய்ய  வேண்டும், பல ஆண்டுகள் அரசு  நிலங்களில் குடியிருக்கும் ஏழை மக்க ளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட தரப்பி னரின் கோரிக்கையாக உள்ளது.                  

இளம்பெண்ணிடம் தகராறு: வாலிபர் கைது

உதகை, பிப்.12- உதகை அருகே கணவனை இழந்து வசித்து வரும் இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபரை காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். நீலகிரி மாவட்டம், லவ்டேல், அன்பு அண்ணா காலனி யைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனது கணவரை இழந்து விட்டதால், கணவரின் வீட்டில் மாமி யாருடன் வசித்து வந்தார். இளம்பெண்ணின் மாமியாரின் உற வினரான மணிகண்டன் (26) என்பவரும் அதே வீட்டின் மற்றொரு பகுதியில் வசித்து வந்துள்ளார். ஏற்கனவே அந்த இளம்பெண்ணின் கணவர் இறந்து விட்டதால், சொத்துக் களை அபகரிக்கும் நோக்கத்தில் மணிகண்டன் கடந்த சில நாட்களாக இளம்பெண் மற்றும் அவரது மாமியாரிடம் தகரா றில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், அவ்வப்போது மது  குடித்துவிட்டு வந்து வாக்குவாதம் செய்ததாக கூறப்படு கிறது. இந்நிலையில், சனியன்று இளம்பெண்ணிடம் தகரா றில் ஈடுபட்டு, வீட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு கூறி அவரை மணிகண்டன் தாக்கியுள்ளார். இதைத்தொ டர்ந்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் லவ்டேல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத் தில் நேர்நிறுத்தி, உதகை கிளை சிறையில் அடைத்தனர்.

அனைத்து திட்டங்களையும் விரைந்து முடிக்க நீலகிரி ஆட்சியர் அறிவுறுத்தல்

உதகை, பிப்.12- நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்டு வரும் அனைத்து திட்டங்களையும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர்க ளுக்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவுறுத்தி உள்ளார். நீலகிரி மாவட்டம், உதகை கூடுதல் ஆட்சி யர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுடன் வளர்ச்சி  பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற் றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அம் ரித் தலைமை வகித்து பேசுகையில், முதல்வர் ஊரக வளர்ச்சித்துறைக்கு அதிக முக்கியத்து வம் வழங்கி வருகிறார். அதனடிப்படையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கள் ஊராட்சி யில் மக்களுக்கு தேவையான அடிப்படை வச திகளை மேம்படுத்தும் பணிகளை செய்து கொடுத்து, பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற வேண்டும். பொதுமக்களுக்கு சுத்த மான குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். எந்தவொரு திட் டத்திற்காவும் இடத்தினை தேர்வு செய்யும் போது ஊராட்சிக்கு சொந்தமான இடமாக அல்லது வருவாய்த்துறைக்கு சொந்தமான இடமாக இருக்க வேண்டும். மேலும், அனைத்து ஊராட்சி ஒன்றியங்க ளில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய்  இணைப்பு பணிகள், பிரதம மந்திரி குடியி ருப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் கட்டப்படும் வீடுகள், மகாத்மா  காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத் தின் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வழங்கி உள்கட்டமைப்புப் பணிகளை விரைந்து முடித்தல் ஆகிய திட்டத்தின் கீழ்  நடைபெற்று வரும் பணிகளை கண்கா ணித்து, விரைந்து முடிக்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். அரசின் திட்டங்கள் பொது மக்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும், என்றார்.

ரயில் ரத்து: அறிவிப்பு இல்லாததால் பயணிகள் ஏமாற்றம்

கோவை, பிப்.11- பாலக்காடு - திருச்செந்தூர் ரயில் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் அறிவிப்பு பலகை இல்லாததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பாலக்காட்டிலிருந்து பொள்ளாச்சி, மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் பாலக்காட்டிலிருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு காலை 7.10க்கு வந்து, திருச்செந்தூருக்கு மாலை 3.45 மணிக்கு சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் திருச்செந்தூரிலிருந்து பகல் 12.05 மணிக்கு புறப் பட்டு, பொள்ளாச்சிக்கு இரவு 8 மணிக்கும், பாலக்காட்டிற்கு இரவு 9.55 மணிக்கும் வந்து சேருகிறது. இதனிடையே பரா மரிப்பு பணி காரணமாக பாலக்காடு - திருச்செந்தூர் ரயில்  கடந்த பிப்.6 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை  நிறுத்தப்படுகிறது. இதேபோன்று திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் கூடல்நகர் வரை மட்டும் இயக்கப்படு கிறது. மேலும் மார்ச் 1, 2 ஆகிய தேதிகளில் பாலக்காட்டுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் திருச் செந்தூர் ரயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது என்பது குறித்த  எந்த தகவலும் அறிவிப்பு பலகையில் இல்லை. இதன் கார ணமாக பெரும்பாலான பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்து, பயணச்சீட்டு எடுப்பதற்கு செல்லும் முன் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இதனால் பய ணிகள் கடும் அவதியடைந்தனர்.