குன்னத்தூர் நடுநிலைப்பள்ளி பழமை மாறாமல் புதுப்பிக்க கோரிக்கை
திருப்பூர், ஜூலை 25 - குன்னத்தூரில் உள்ள 83 ஆண்டுகாலம் பழமை யான ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை, அதன் பழமை தன்மை மாறாமல் புதுப்பிக்கும்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரி உள்ளது.
இது தொடர்பாக ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய நிர் வாகத்திற்கு குன்னத்தூர் மார்க்சிஸ்ட் கட்சி கிளை சார் பில் அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனுவில், திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், குன்னத்தூர் நகரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்பு உள்ள கட்டிடம் மேல் கூரை சிதிலமடைந்து காணப்படுகிறது. கல் கட்டிடம் இன்னும் உறுதியான நிலையில் உள்ளது. இந்த கட்டிடம் 1941 ஆம் ஆண்டு நஞ்சுண்டாபுரம் கருப் பண நாடார் என்பவரால் அமைத்து கொடுக்கப்பட்ட பாட சாலை என அதில் உள்ள கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஆகவே குன்னத்தூர் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் பொருட்டு 83 ஆண்டு காலமாக தாங்கி நிற்கும் இந்த கட்டிடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ளதால் குழந்தைகளின் நலன் கருதி விரைவாக சீர மைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திருப்பூர், ஜூலை 25 - அரசு ஊழியர்களையும் மக்களையும் வஞ்சிக்கும் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒன்றிய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள 2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்வைத்த கோரிக் கைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக புதிய பென்ஷன் திட்டம் ரத்து, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணி யிடங்களை நிரப்புவது, வருமான வரி உச்சவரம்பு 10 லட்சமாக உயர்த்துவது, ஒப்பந்த பணி நியமனம் ரத்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, எட்டா வது ஊதியக்குழு அமைப்பது என எதுவும், நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. மேலும் ஒட்டு மொத்தமாக தமிழகம் முற்றிலும் நிராகரிக்கப் பட்டுள்ளது.
எனவே ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலக்குழு விடுத்த அறைகூவல் அடிப் படையில் புதன், வியாழன் ஆகிய இரு நாட்கள் திருப்பூர் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற் றன. இதில் பலர் கலந்து கொண்டனர்.
இலவச வீட்டுமனைக்கு தகுதியான இடம் கேட்டு போராட்டம்
திருப்பூர், ஜூலை 25- காங்கயம் அருகே மாற்று இடத்தில் இல வச வீட்டு மனை வழங்க வலியுறுத்தி எல்லப் பாளையம் புதூர் ஊராட்சி மக்கள் இரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் தாலுகா, எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்குட் பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 20 பட்டியலின குடும்பத்தினர் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இதையடுத்து, தாங்கள் சொந்த மாக வீடு கட்டி குடியிருப்பதற்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வலியுறுத்தி, கடந்த 4 வருடங்களாக பலமுறை மனு கொடுத்தும், பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்ட னர்.
இதைத் தொடர்ந்து, மேற்கண்ட 20 குடும் பங்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டு, எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிப் பகு தியில் கடந்த மார்ச் மாதம் மாவட்ட ஆட்சிய ரால் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப் பட்டது. இதையடுத்து, பட்டாவுக்கு உரிய நிலத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்களன்று மனு கொடுத்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக, மாவட்ட ஆட்சியரின் உத்தர வின்படி, ஊதியூர் வருவாய் ஆய்வாளர் மற் றும் எல்லப்பாளையம் புதூர் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் நிலத்தை அளவிடுவ தற்காக புதன்கிழமை இம் மக்களை அழைத் துச் சென்றனர்.
ஆனால் வீடு கட்டி குடியிருப்பதற்கு தகு தியில்லாத இடத்தில் நிலத்தைக் காட்டிய தால், அதிருப்தி தெரிவித்த இம்மக்கள், தங்க ளுக்கு மாற்று இடத்தில் வீட்டுமனை வழங்க வலியுறுத்தி புதன்கிழமை மாலை எல்லப் பாளையம் புதூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலக வளாகத்தில், ஆதித்தமிழர் ஜன நாயக பேரவையின் நிறுவனத் தலைவர் அ.சு.பவுத்தன் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து வட்டாட்சியர் மயில்சாமி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களி டம் புதன்கிழமை இரவு 9 மணியளவில் நேரில் வந்து, பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எந்த முடிவும் எட்டப்படாததால், வியாழக் கிழமை இரண்டாவது நாளாக காத்திருப் புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு புறம் போக்கு நிலத்தில் அண்மையில் 44 பட்டிய லின குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு, நிலம் அளவீடு செய்யப் பட்டுள்ளது. அதே பகுதியில் மேலும் நிலங் கள் காலியாக இருப்பதால், பொருளா தாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் எங்களுக்கு கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ், மேற்கண்ட இடத் தில் வீடு கட்டித்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளோம், என போராட் டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.