districts

img

தாராபுரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தாராபுரம், ஜூலை 6-  தாராபுரத்தில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் விதமாகக் கட்டப் பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்  பணி நடைபெற்றது.  தாராபுரம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தாராபுரம் நகரில் உள்ள நெடுஞ் சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தாராபுரம் கோட்ட செயற் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி தலை மையில் நடைபெற்றது. தாராபுரம் பெரிய கடைவீதி, பொள்ளாச்சிசாலை, தாலுகா அலுவலக சாலை, பூங்கா சாலை, ஐந்துமுனை சந்திப்பு ஆகிய  பகுதிகளில் சாலைப் போக்குவரத் துக்கு இடையூறு செய்யும் விதமாகச்  சாலையை ஆக்கிரமித்து வணிகவளா கங்கள், கடைகளின் படிக்கட்டுகள் கட் டப்பட்டிருந்தது. இதையடுத்து கடை கள் மற்றும் வணிக வளாகங்களுக்குச்  செல்வோர் வாகனங்களைச் சாலை யிலேயே நிறுத்திச் செல்கின்றனர். இத னால் போக்குவரத்து பாதிக்கப்படு வதோடு விபத்துகளும் ஏற்பட்டு  வந்தது. இதுகுறித்து புகார் வந்ததைத்  தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார் பில் சாலையோர ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்டவர்கள் அகற்றிக் கொள் ளுமாறு ஆட்டோ மூலம் கடந்த 2 நாட் களாக அறிவிக்கப்பட்டு வந்தது. இத னையடுத்து சில கடைக்காரர்கள் ஆக்கி ரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக் கொண்டனர். இதைதொடர்ந்து நெடுஞ்சாலைத் துறையின் அறிவிப்புக்கு பிறகும் பெரும்பாலான கடைக்காரர்கள் ஆக்கி ரமிப்புகளை அகற்றவில்லை. இதைய டுத்து நெடுஞ்சாலைத்துறையினர் ஜேசிபி மற்றும் கனரக வாகனங்கள்  மூலம் பெரிய கடை வீதியில் உள்ள ஆக் கிரமிப்புகளை அகற்றினர். தொடர்ந்து  தாராபுரம் நகர் முழுவதும் உள்ள  ஆக்கிரமிப்புகள் இரண்டு நாட்களுக் குள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.