districts

img

நீலகிரி பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கான தடை நீக்கம்

உதகை, ஜூலை 2- கோடை சீசன் முடிவடைந்த  நிலையில், நீலகிரியில் உள்ள தோட் டக்கலை பூங்காக்களில் சினிமா படப்பிடிப்பு நடத்த விதிக்கப்பட்டு இருந்த தடை நீங்கியது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள், பசுமையான புல் வெளிகள், இயற்கை எழில் மிகுந்த  மலைப்பகுதிகளில் சினிமா படப் பிடிப்பு நடப்பது வழக்கம். இயற்கை காட்சிகள், மலைகளை மோதி செர் லும் மேகக்கூட்டம் போன்றவற்றின் பின்னணியில் காட்சி எடுக்கப்படுகி றது. தமிழ் மட்டுமின்றி பிற மொழி திரைப்படங்களும் உதகையில் படமாக்கப்படுகிறது. நீலகிரியில் தோட்டக்கலைத்துறையின் கீழ் உள்ள பூங்காக்களில் கட்டணம் அடிப்படையில் சினிமா படப்பிடிப் புக்கு அனுமதி வழங்கப்பட்டு வரு கிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. மே மாதத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி மலர் கண்காட்சி உள்பட பல்வேறு  நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதைக்கண்டு ரசிக்க வெளி மாநி லங்கள் மற்றும் பிற மாவட்டங்க ளிலிருந்து சுற்றுலா பயணிகள் அதி கம் பேர் வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிக ளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப் பதற்காகவும், சுற்றுலா தலங்களில் கண்காட்சி பணிகள் நடைபெற்ற தால் உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ்  பூங்கா உள்பட தோட்டகலைத் துறைக்கு சொந்தமான 7 முக்கிய சுற்றுலா தலங்களிலும் கடந்த ஏப் ரல் முதல் ஜூன் மாதம் வரை 3 மாதங் களுக்கு சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. கோடை விழாவில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா உட் பட மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக் கண்காட்சி, காய்கறி கண்காட்சி நடைபெற்றது. அனைத்து இடங் களிலும் சீசன் சமயத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக அலைமோதியது. கோடை சீசன் நிறைவடைந்த தால் சினிமா படப்பிடிப்பிற்கான தடை சனியன்று முதல் நீக்கப்பட் டுள்ளது. மேலும், தோட்டகலைத் துறைக்கு சொந்தமான பூங்காக் களில் சினிமா படப்பிடிப்புக்கு அனு மதி பெற தோட்டக்கலை அலுவ லகத்தை அனுகலாம் என அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.

வாகனங்கள் அணிவகுத்து நின்றன

உதகைக்கு விடுமுறை நாளான ஞாயிறன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதன் காரணமாக உதகை – தொட்ட பெட்டா சாலை, அரசு தாவரவியல் பூங்கா, பைகாரா மற்றும் குன்னூர், கோவை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்ற தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல முடியாமல் சாலையிலேயே பல  மணி நேரம் காத்திருந்தனர். மேலும், போக்குவரத்தை சீர் செய்ய  போதிய காவலர்கள் இல்லாததால், நகரின் முக்கிய பகுதியான சேரிங் கிராஸ் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் உள்ளூர் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகினர்.

;