தீம் பார்கில் குளித்த சிறுவன் பலி குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கல்
நாமக்கல், மே 26- ராசிபுரம் அருகே தீம் பார்கில் குளித்த சிறுவன் உயிரி ழந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவா ரண தொகை வழங்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட் பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் பரவச உலகம் என்ற தீம் பார்க்கில் கடந்த மே 11 ஆம் தேதியன்று சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் - உமா தம்பதி யினரின் மகன் சர்வேஸ்வரன் (11), என்ற சிறுவன் திடீரென மயங்கிய விழுந்தார். இதையடுத்து சிறுவன் முதலுதவிக்கு பின் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறு வனை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார் அளிக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆர்.ஜி. ஆனந்த் தலைமையிலான குழுவினர் பரவச உலகம் தீம் பார் கில் ஆய்வு செய்தனர். மாவட்ட ஆட்சியர் ச.உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், ராசிபுரம் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் பொதுப்பணித் துறை, மருத்துவத்துறை, தாசில்தார் ஆகியோர் இந்த ஆய் வில் ஈடுபட்டனர். இந்நிலையில், CPCR 2005 சட்டப்பிரிவு 15 (1) மற்றும் (3)ன் படி, அந்த பூங்கா ரூ.4 லட்சம் சிறுவன் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் சிறு வனின் பெற்றோருக்கு ரூ.4 லட்சத்திற்கான நிவாரண தொகை வழங்கப்பட்டது.
கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்
சேலம், மே 26- சேலம் மாநகராட்சி பகுதியில் சோதனை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், 65 கிலோ கெட்டுப் போன இறைச்சிகளை பறிமுதல் செய்து, 3 கடைகளுக்கு சீல் வைத்தனர். சேலம் மாநகராட்சி பகுதிகளில் இறைச்சி கடைகளில் சுகா தாரமற்ற முறையில் கெட்டுப்போன இறைச்சிகள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிக ளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கதிரவன் தலைமையி லான குழுவினர் சூரமங்கலம், 5 ரோடு, ஜங்ஷன், அஸ்தம் பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 15க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் சுகாதார மற்ற முறையில் 61 கிலோ ஆட்டிறைச்சி வைக்கப்பட்டி ருந்தது தெரியவந்தது. மேலும், தொடர்ந்து ஆய்வு மேற் கொண்டதில் 4 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி இருந்த தும் கண்டறியப்பட்டது. இதனையடுத்து 65 கிலோ மதிப்பி லான இறைச்சியை அதிகாரிகள் கீழே கொட்டி அழித்த னர்.
சாலையோர கடைகள் உரிமம் பெற வேண்டும்
நாமக்கல், மே 26- நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சாலையோர உணவு வணி கர்கள், தள்ளுவண்டி கடை நடத்துபவர்கள் கட்டாயம் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும் என ஆட்சியர் அறி வித்துள்ளார். இதுதொடர்பாக நாமக்கல் ஆட்சியர் ச.உமா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மாவட்டத்தில் உள்ள சாலையோர உணவு வணிகர்கள், தள்ளுவண்டி கடைக ளுக்கு கட்டாயம் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும். கடைகளில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை கடை பிடிக்க வேண்டும். தரமான குடிநீர் வழங்கப்பட வேண்டும். இரவு நேரம் மட்டும் செயல்படும் உணவு கடைகள், துரித உணவு கடைகளில் செயற்கை நிறமிகள் மற்றும் அஜின மோட்டோ பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தப்பட்ட எண் ணெயை மீண்டும் மீண்டும் மறுசுழற்சிக்கு பயன்படுத்தாமல், பயோ டீசல் தயாரிக்க வழங்க வேண்டும் என தெரிவித் துள்ளார்.
பட்டுக்கூடு ஏலம்
தருமபுரி, மே 26- தருமபுரியில் பட்டு வளர்ச் சித்துறை சார்பில் செயல் பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு வியாழ னன்று பல்வேறு மாவட் டங்களில் இருந்து விவசாயி கள் பட்டுக்கூடுகளை விற்ப னைக்கு கொண்டு வந்தனர். 1,501 கிலோ பட்டுக்கூடுகள் வந்தன. இதில் ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.447க்கும், குறைந்தபட்ச மாக ரூ.215க்கும், சராசரி யாக ரூ.348.19க்கும் விற் பனையானது. மொத்தம் ரூ.5 லட்சத்து 22 ஆயிரத்துக்கு பட்டுக்கூடு வர்த்தகம் நடை பெற்றது. இந்த ஏலத்தில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டு, பட்டுக் கூடுகளை ஏலம் ஏடுத்தனர்.இந்த வர்த்தகம் புதனன்று நடைபெற்றதை விட அதிக மாகும்.
பெண் ஐடி ஊழியரிடம் ரூ.9 லட்சம் மோசடி
கோவை, மே 26- அதிகம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி ரூ.9 லட்சம் மோசடி செய்ததாக ஐடி ஊழியர் கோவை மாநகர குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். கோவை, கணபதி, லட்சுமி கார்டனை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மனைவி புவ னேஸ்வரி (32). ஐடி ஊழியரான இவரின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு சில நாட்களுக்கு முன்பு மெசேஜ் வந்துள்ளது. அதில் பகுதி நேர வேலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டி ருந்தது. இதனையடுத்து புவனேஸ்வரி அதில் உள்ள லிங்கை கிளிக் செய்து டெலி கிராம் குழுவில் இணைந்தார். இதன்பின்னர் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் கூகுள் மேப் குறித்து ரிவ்யூ செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்றும், பிட் காயின் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்க லாம் என தெரிவித்துள்ளார். இதனை உண்மை என நம்பிய புவனேஸ்வரி, அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.2 ஆயிரம் பணம் செலுத்தி யுள்ளார். இதனையடுத்து, அவருக்கு லாப மாக ரூ.2800 பணம் அனுப்பியுள்ளனர். மேலும் ஆன்லைன் மூலமாக அவர்கள் அனுப்பிய பணிகளை செய்து கொடுத்துள்ளார். இத னையடுத்து, அந்த நபர் கூறிய வங்கி கணக் கில் வெவ்வேறு காலகட்டங்களில் ரூ.8.97 லட்சம் பணம் அனுப்பியுள்ளார். ஆனால், அவர் கூறியபடி பணம் அனுப்பா மல் மோசடி செய்தது தெரியவந்தது. இது குறித்து புவனேஸ்வரி கோவை மாநகர குற் றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தார். அப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
15 மதுபான பார்களுக்கு சீல்
கோவை, மே 26- பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் உரிய அனுமதி யின்றி செயல்பட்ட 15 மதுபான பார்களுக்கு சீல் வைத்து கலால்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக செயல்படும் மதுபான பார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கலால் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. அதன்படி பொள்ளாச்சி, ஆனைமலை, சுல்தான் பேட்டை, கிணத்துக்கடவு, நெகமம் உள்ளிட்ட பகுதியில் உள்ள மதுபான பார்களில் கோவை தெற்கு மாவட்ட கலால் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் 3 குழுக்களாக இணைந்து சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை யில் 15 மதுபான பார்கள் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மதுபான பார் களுக்கும் கலால் துறை அதிகாரிகள் சீல் வைத்து நடவ டிக்கை எடுத்தனர். இச்சோதனையில் கலால் துறை வட்டாட்சி யர் விஜயகுமார், கிணத்துக்கடவு காவல் ஆய்வாளர் முத்துப் பாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.