கோயம்புத்தூர் தங்க நகை தொழிலாளர் யூனியன் சார்பில், செவ்வாயன்று வயநாடு பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி சேகரித்தனர். இதில், ரூ.30 ஆயிரத்து 500 யை சிஐடியு கோவை மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ் ணமூர்த்தியிடம் சங்கத்தின் தலைவர் என்.எம். கண்ணன், செயலாளர் பி.சந்திரன், பொருளாளர் மருதன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர்.