districts

img

10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு பதிவு உயர்வு வழங்க வலியுறுத்தி ஆர்பாட்டம்

திருப்பூர், ஏப்.18- 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி  உதவியாளர்களுக்கு பதிவு உயர்வு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு செவ்வா யன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும்  உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் பி. சித்ரா  தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில், பத்து குழந்தைகளுக்கு குறை வாக இருக்கும் பிரதான மையங்களை மினி  மையமாக்குவதையும், ஐந்து குழந்தைக ளுக்கு குறைவாக இருக்கும் மினி மையங்க ளை பிரதான மையத்தோடு இணைக்கும் திட் டத்தை கைவிட வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக இரண்டு அல்லது மூன்று மையங்கள் பார்ப்ப தால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி  வருகிறார்கள், இதை சரி செய்திட வேண்டும்.  உடனடியாக காலிப் பணியிடங்களை நிரப்ப  வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் வழங் கப்படாமல் உள்ள மினி மைய ஊழியர்க ளுக்கு பதவி உயர்வு வழங்கவும், 10 ஆண் டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவி யாளர்களுக்கு எந்தவித நிபந்தனையின்றி உடனடியாக பதிவு உயர்வு வழங்க வேண் டும். 13 மாவட்டங்களில் சிலிண்டர் பில்லில்  உள்ளபடி ரூபாய் 1205 கொடுக்கப்படுகிறது. அதேபோல் திருப்பூர் மாவட்டத்திலும் வழங் கிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கை கள் முன்வைக்கப்பட்டது. இதில், கோரிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர் கே.சித்ரா பேசினார். சி ஐ டி யு  மாநிலச் செயலாளர் கே.சி.கோபி குமார்  நிறைவுறையாற்றினார். சிஐடியு உழைக்கும்  பெண்கள் ஒருங்கிணைப்பு குழு எம்.பாக்கி யம் வாழ்த்தி பேசினர். இதில்  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட நிர்வாகி சித்திரா தேவி நன்றி கூறி னார்.