districts

கோவை: 2 மாதங்களில் 1378 வழக்குகள் பதிவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

கோவை, மே 27- கோவை மாவட்டத்தில் கடந்த  இரண்டு மாதங்களில் 1378 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் செல் போன்கள் காணாமல் போவது மற்றும்  திருட்டு சம்பந்தமாக ஏராளமான புகார் கள் வரப்பெற்றன. . இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து செல் போன்களை கண்டுபிடிக்கும் பணியில்  ஈடுபட்டனர்.  அதன்படி கோவை மாவட் டத்தில் கடந்த 2 மாதத்தில் ரூ.19.5 லட் சம் மதிப்பிலான 130 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. அவற்றை உரியவ ரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பத்ரிநாராயணன் பங்கேற்று செல்போன்களை உரியவர்களிடம் ஒப் படைத்தார். இதன்பின் அவர் செய்தியாளர்களி டம் மேலும் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங் களில் நடந்த கொலை வழக்குகள், போதைப் பொருட்கள் விற்பனை, மது  விற்பனை, குண்டர் தடுப்பு சட்டம்,  சூதாட்டம், லாட்டரி விற்பனை மற்றும்  செல்போன் திருட்டு போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்பாக 1378 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 1516 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 71 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 97 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரூ.17,12,830 மதிப்புள்ள 172 கிலோ  கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள் ளது. 169 குட்கா வழக்குகள் பதிவு செய் யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 178 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரூ.20,55,006 மதிப்புள்ள  2678 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1192 மதுவிலக்கு  வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 1206 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமி ருந்து 4900 லிட்டர் மதுபானங்கள் மற் றும் 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

57 திருட்டு வழக்குகளில் சம்மந்தப் பட்ட 97 குற்றவாளிகள் கைது செய்யப் பட்டு அவர்களிடமிருந்து ரூ.39,83,100 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற் றும் பெண்களுக்கு எதிராக நடை பெற்ற குற்றங்கள் சம்மந்தமாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 30 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவ லுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் போக்சோ வழக்குகளில் சம்மந்தப் பட்ட 2 குற்றவாளிகளுக்கு தலா 18  மற்றும் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள் ளது. போக்சோ சட்டத்தின் கீழ் பதியப் பட்ட வழக்குகளில் 103 வழக்குகளுக்கு இறுதி அறிக்கை தாக்கல் செய்தும் 18  வழக்குகள் நீதிமன்ற கோப்புக்கும் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சட்டம் ஒழுங் கிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 5 குற்றவாளி கள் மற்றும் தொடர் திருட்டில் ஈடுபட்டு  வந்த 1 குற்றவாளி என மொத்தம் 6 குற்ற வாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத் தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்ட காவல்துறை சார் பாக 6 சைபர் கிரைம் விழிப்புணர்வு மற் றும் குழந்தைகள் மற்றும் பெண்களுக் கான 119 விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.