districts

img

ரூ.10 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

கோவை, ஏப்.27- கோவை மாநகராட்சி கிழக்கு  மண்டலத்திற்குட்பட்ட 22 ஆவது வார்டில், ரூ.10 கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழனன்று மாநக ராட்சி உதவி ஆணையர் தலை மையில் அந்நிலத்தை மீட்டனர்.  கோவை மாநகராட்சிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்கள், பூங்காக்கள் போன்ற வற்றை மாநகராட்சி நிர்வாகம் மீட்டு  வருகிறது.  இதன் ஒரு பகுதியாக,  கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 22 ஆவது  வார்டு  ராமகிருஷ்ணா லே-அவுட்  பகுதியில் சுமார் 40 சென்ட் இடம்  ஆக்கிரமித்து கட்டடம் கட்டப்பட்டு இருந்தது. இந்த இடம் மாநகராட்சி யின் பூங்காக்கு சொந்தமான இட மாகும்.  இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வியாழனன்று கிழக்கு மண்டல உதவி ஆணையர்  முத்துராமலிங்கம் தலைமையில், உதவி நகரமைப்பு அலுவலர் குமார்  மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் கட்டடத்தை இடித்து மீட்டனர். இந்த இடத்தின் மதிப்பு சுமார் ரூ.10 கோடி ஆகும். அந்த இடத்தில் உள்ள கட்டடம் இடித்து பூங்கா பணிகளுக்கு ஏற்றவாறு  உருவாக்கப்பட்டது. இதே போல  அனைத்து அக்கிரமிப்பு பூங்காக் களையும் மீட்டெடுப்போம் என மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.